சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று முதல் வரும் 25ம் தேதி வரை தபால் வாக்கு செலுத்துவதற்கான பார்ம் 12டி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 2024ம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் இன்று முதல் வருகின்ற 25ம் தேதி வரை தபால் வாக்கு செலுத்துவதற்கான பார்ம் 12டி வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.

இதுகுறித்து சத்யபிரதா சாஹு கூறுகையில், தமிழகத்தில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பான விவரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளுக்கு இன்று முதல் வரும் 25ம் தேதி வரை அலுவலர்கள் சென்று தபால் வாக்குகளுக்கான விருப்ப படிவம் 12டி வழங்கப்படும். இது கட்டாயம் அல்ல. விரும்பியவர்கள் மட்டும் படிவத்தை பூர்த்தி செய்து தரலாம்.
அதன்பின்னர் வாக்குப்பதிவுக்கு முன்னதாக விருப்ப படிவம் தந்தவர்களிடம் சம்பந்தப்பட்ட அலுவலர், வருவாய் காவல் துறையினர் குழுவாக சென்று தபால் வாக்கு படிவத்தை தந்து வாக்குப்பதிவு செய்த பின் அந்த படிவத்தை பெட்டியில் போடுவார்கள்.அதன்பின் இவ்வாறாக பெறப்படும் வாக்குச் சீட்டுகள் அடங்கிய பெட்டி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்படைக்கப்படும்.
அனைத்துப் பணிகளும் முழுமையாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் பார்வையில் நடைபெறும். தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி முன்னரே முடித்துவிட்டது. தேர்தல் பணி ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வேட்புமனு தாக்கல் முடிந்த பின் இப்பணி தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}