ஆங்காங்கே மறியல்.. விமான போக்குவரத்து சீராகிறது..  மெல்ல நார்மல் ஆகிறது சென்னை

Dec 05, 2023,11:32 AM IST

சென்னை: கோரதாண்டவம் ஆடி சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டது  புயல். தற்பொழுது சென்னையை கடந்த நிலையில் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.


சென்னையில் கடந்த 2 நாட்களாக  புயல் வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையே கடல் போல் கட்சியளித்தது. மின்சாரம் தடை, சாலைகளில் வெள்ளம், வீடுகளில் வெள்ள நீர் தேக்கம், ரோடுகளில் திடீர் பள்ளம், சாலை போக்குவரத்து பாதிப்பு, விமான போக்குவரத்து பாதிப்பு, ரயில் போக்குவரத்து பாதிப்பு, அவசர தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாத நிலை உள்ளிட்ட பல பிரச்சனைகளில் சிக்கி மக்கள் தவித்து வந்தனர் .இந்நிலையில் சென்னையை கதறவிட்ட  புயல் சென்னையை விட்டு ஆந்திராவிற்கு சென்றதால் சென்னை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.




சென்னையில் இன்று மழை நின்றுள்ளது. மழை நின்றாலும்  புயல் விட்டுச் சென்ற பாதிப்பு மட்டும் அதிகமாக உள்ளது. ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றன. முழுவீச்சில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் குறிபிட்ட இடங்களில் மழைநீர் வடியாமல் இருப்பதினால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல் ஈடுபட்டு வரும் பகுதிகளிலில் மீட்பு குழுவினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். 


சாலை போக்குவரத்து குறிப்பிட்ட பகுதிகளில்  தொடங்கியுள்ளது. பல  இடங்களில் மின் இணைப்பும் வழங்கப்பட்டு வருகிறது. புறநகர்களில் சரிவர மின்சாரம் வரவில்லை.  சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 9 மணி  முதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த அளவில் தான் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறாக சென்னை இயல்பு நிலயை நோக்கி திரும்பி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்