சென்னை: கோரதாண்டவம் ஆடி சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டது புயல். தற்பொழுது சென்னையை கடந்த நிலையில் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக புயல் வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையே கடல் போல் கட்சியளித்தது. மின்சாரம் தடை, சாலைகளில் வெள்ளம், வீடுகளில் வெள்ள நீர் தேக்கம், ரோடுகளில் திடீர் பள்ளம், சாலை போக்குவரத்து பாதிப்பு, விமான போக்குவரத்து பாதிப்பு, ரயில் போக்குவரத்து பாதிப்பு, அவசர தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாத நிலை உள்ளிட்ட பல பிரச்சனைகளில் சிக்கி மக்கள் தவித்து வந்தனர் .இந்நிலையில் சென்னையை கதறவிட்ட புயல் சென்னையை விட்டு ஆந்திராவிற்கு சென்றதால் சென்னை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று மழை நின்றுள்ளது. மழை நின்றாலும் புயல் விட்டுச் சென்ற பாதிப்பு மட்டும் அதிகமாக உள்ளது. ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றன. முழுவீச்சில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் குறிபிட்ட இடங்களில் மழைநீர் வடியாமல் இருப்பதினால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல் ஈடுபட்டு வரும் பகுதிகளிலில் மீட்பு குழுவினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
சாலை போக்குவரத்து குறிப்பிட்ட பகுதிகளில் தொடங்கியுள்ளது. பல இடங்களில் மின் இணைப்பும் வழங்கப்பட்டு வருகிறது. புறநகர்களில் சரிவர மின்சாரம் வரவில்லை. சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த அளவில் தான் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறாக சென்னை இயல்பு நிலயை நோக்கி திரும்பி வருகிறது.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
{{comments.comment}}