டோக்கியோ: ஜப்பான் நாட்டில் ஹென்ஷு பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
ஜப்பான், தைவானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இது பூமிக்கு அடியில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதால் தைவானில் ஒரு சில பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனால் மக்கள் பீதியில் உறைந்த நிலையில், அடுத்து கடல் அலைகள் மூன்று அடி தூரம் வரை எழுந்து சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் ஜப்பான், தைவானில் பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜப்பானில் இரண்டாவது நாளாக இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜப்பானின் ஹொன்ஷு கிழக்குக் கடற்கரை அருகே உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. இந்த நில அதிர்வின் மையம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. தற்போது மீண்டும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வழங்கப்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் வெளிவரவில்லை.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}