டோக்கியோ: ஜப்பான் நாட்டில் ஹென்ஷு பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
ஜப்பான், தைவானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இது பூமிக்கு அடியில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதால் தைவானில் ஒரு சில பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனால் மக்கள் பீதியில் உறைந்த நிலையில், அடுத்து கடல் அலைகள் மூன்று அடி தூரம் வரை எழுந்து சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் ஜப்பான், தைவானில் பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜப்பானில் இரண்டாவது நாளாக இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜப்பானின் ஹொன்ஷு கிழக்குக் கடற்கரை அருகே உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. இந்த நில அதிர்வின் மையம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. தற்போது மீண்டும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வழங்கப்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் வெளிவரவில்லை.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}