ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 620 பேர் பலி!

Sep 01, 2025,06:23 PM IST

காபூல்: ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரைக்கும் 620 பேர் பலியாகியுள்ளனர்.


ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் நேற்று நள்ளிரவில் திடீர்ரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியிருந்தது.கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அமெரிக்க வியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, நிலநடுக்கம் நேற்று இரவு 11.47 மணிக்கு உணரப்பட்டுள்ளது. ஜலாலாபாத்திற்கு கிழக்கே 27 கி.மீ தூரத்தில் ஏற்பட்டது. 




ஜலாலாபாத் நகரத்தில் சுமார் 2, 00,000 மக்கள் வசிக்கின்றனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தில் இதுவரைக்கு சுமார் 620 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 1000த்திற்கு மேற்பட்டவர்கள் இந்த நிலநடுக்கத்தின் போது படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து ஆப்கானிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 622 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 1,000 பேர் காயமடைந்தனர். பல்வேறு இடங்களில் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்