ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை!

Aug 08, 2024,02:30 PM IST

டோக்கியோ:   ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.


ஜப்பானில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் 7.1 ரிக்டர் அளவில்  2வது நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.




பலத்த நிலநடுக்கங்கள் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் காயமாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரு நிலநடுக்கங்களும் ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷீ பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதனால்  நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.


ஜப்பானில் கடந்த 2021ம் ஆண்டு கிழக்கு கடலோரப் பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் எற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்ற போதிலும் அது சக்தி வாய்ந்ததாக அமைந்திருந்தது. அது மட்டும் இன்றி கடந்த 2011ம் ஆண்டு இதே பகுதியில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்  ஏற்பட்டிருந்ததது.


இந்நிலையில் தற்போது  மீண்டும் 7.1 ரிக்கடர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும் அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்