டோக்கியோ: ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
ஜப்பானில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் 7.1 ரிக்டர் அளவில் 2வது நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
பலத்த நிலநடுக்கங்கள் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் காயமாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரு நிலநடுக்கங்களும் ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷீ பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் கடந்த 2021ம் ஆண்டு கிழக்கு கடலோரப் பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் எற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்ற போதிலும் அது சக்தி வாய்ந்ததாக அமைந்திருந்தது. அது மட்டும் இன்றி கடந்த 2011ம் ஆண்டு இதே பகுதியில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததது.
இந்நிலையில் தற்போது மீண்டும் 7.1 ரிக்கடர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும் அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}