டோக்கியோ: ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
ஜப்பானில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் 7.1 ரிக்டர் அளவில் 2வது நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
பலத்த நிலநடுக்கங்கள் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் காயமாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரு நிலநடுக்கங்களும் ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷீ பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் கடந்த 2021ம் ஆண்டு கிழக்கு கடலோரப் பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் எற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்ற போதிலும் அது சக்தி வாய்ந்ததாக அமைந்திருந்தது. அது மட்டும் இன்றி கடந்த 2011ம் ஆண்டு இதே பகுதியில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததது.
இந்நிலையில் தற்போது மீண்டும் 7.1 ரிக்கடர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும் அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}