"தேங்க் யூ சார்".. பிரதமரை பார்த்துத் திரும்பிய பிரக்ஞானந்தா நெகிழ்ச்சி!

Sep 01, 2023,09:36 AM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை, செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா தனது பெற்றோருடன் சென்று சந்தித்தார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கடுமையான போட்டியைக் கொடுத்த இளம் வீரர் பிரக்ஞானந்தா, பட்டத்தை தவற விட்ட போதிலும் கூட அனைவரின் பாராட்டுக்களையும், ஆச்சரியங்களையும், அன்பையும் ஒரு சேர வாரிக் கொண்டு விட்டார் பிரக்ஞானந்தா.

தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு விமான நிலையத்தில் மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினையும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்தார் பிரக்ஞானந்தா.



முதல்வரிடம் தான் வாங்கிய வெள்ளிப் பதக்கத்தையும் காட்டி மகிழ்ந்தார் பிரக்ஞானந்தா.  இதைத் தொடர்ந்து அவருக்கு அரசு சார்பில் பரிசை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் அவருக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து உதவிகள்  செய்யும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று டெல்லி சென்ற பிரக்ஞானந்தா, தனது பெற்றோருடன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அவரிடம் தான் பெற்ற வெள்ளிப் பதக்கத்தைக் கொடுத்து மகிழ்ந்தார். பிரதமர் நரேந்திர மோடி, பிரக்ஞானந்தாவையும், அவரது பெற்றோரையும் பாராட்டிப் பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து பிரக்ஞானந்தா போட்டுள்ள டிவீட்டில்,  பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது மிகப் பெரிய கெளரவமாக கருதுகிறேன். எனக்கும், எனது பெற்றோருக்கும் நீங்கள் கூறிய ஆதரவு வார்த்தைகளுக்காக நன்றி சார் என்று நெகிழ்ந்துள்ளார் பிரக்ஞானந்தா.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்