சென்னை: தேமுதிகவின் செய்தி தொடர்பாளராக நடிகர் ராஜேந்திர நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிகவில் பல்வேறு பொறுப்புகளுக்கு நியமனங்களை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன்படி தேமுதிகவின் புதிய செய்தி தொடர்பாளராக ராஜேந்திரநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நடிகராக இருந்து வருபவர். விஜயகாந்த்துடன், வடிவேலுவுடன் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். மீசை ராஜேந்திரநாத் என்பது இவரது செல்லப் பெயராகும்.
இதே போல சமூக வலைதள குழுக்களுக்கும் நிர்வாகிகளை பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன்படி சமூக வலைதள அணியின் செயலாளராக எஸ். செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். துணைச் செயலாளராக அரவிந்தன், மகேந்திரன், தமிழரசன், சிவக்குமார் நாகப்பன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர தொலைக்காட்சியில் பங்கேற்கும் விவாத குழுவையும் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன்படி அவை தலைவரான டாக்டர் வி. இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர் மோகன்ராஜ், துணைச்செயலாளர் பார்த்தசாரதி, உயர்மட்ட குழு உறுப்பினர் இளங்கோவன், விழுப்புரம் தேமுதிக செயலாளர் வெங்கடேசன், தேர்தல் பணிக்குழு செயலாளர் பேராசிரியர் மகாலட்சுமி, செய்தி தொடர்பாளர் எம் வி எஸ் ராஜேந்திரநாத், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபா ரவி ஆகியோர் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்வார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்,.
நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி தருவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
கருகிய மலர்.. வாடாத வாசம்.. அவள்.. Burnt flower!
கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
தைப்பூசத் திருவிழா.. சென்னிமலையில் கோலாகலம்.. நாளை கொடியேற்றம்
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பதிவு!
{{comments.comment}}