சென்னை: தேமுதிகவின் செய்தி தொடர்பாளராக நடிகர் ராஜேந்திர நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிகவில் பல்வேறு பொறுப்புகளுக்கு நியமனங்களை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன்படி தேமுதிகவின் புதிய செய்தி தொடர்பாளராக ராஜேந்திரநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நடிகராக இருந்து வருபவர். விஜயகாந்த்துடன், வடிவேலுவுடன் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். மீசை ராஜேந்திரநாத் என்பது இவரது செல்லப் பெயராகும்.
இதே போல சமூக வலைதள குழுக்களுக்கும் நிர்வாகிகளை பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன்படி சமூக வலைதள அணியின் செயலாளராக எஸ். செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். துணைச் செயலாளராக அரவிந்தன், மகேந்திரன், தமிழரசன், சிவக்குமார் நாகப்பன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர தொலைக்காட்சியில் பங்கேற்கும் விவாத குழுவையும் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன்படி அவை தலைவரான டாக்டர் வி. இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர் மோகன்ராஜ், துணைச்செயலாளர் பார்த்தசாரதி, உயர்மட்ட குழு உறுப்பினர் இளங்கோவன், விழுப்புரம் தேமுதிக செயலாளர் வெங்கடேசன், தேர்தல் பணிக்குழு செயலாளர் பேராசிரியர் மகாலட்சுமி, செய்தி தொடர்பாளர் எம் வி எஸ் ராஜேந்திரநாத், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபா ரவி ஆகியோர் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்வார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்,.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}