செங்கோடையன் பேச்சு... ஒன்று பட்டால் உண்டு வாழ்வு: பிரேமலதா விஜயகாந்த் கருத்து!

Sep 05, 2025,05:19 PM IST

சென்னை: ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது தான் நமது பழமொழி. எல்லாரும் ஒற்றுமையாக இருத்தல் என்பது வரவேற்கக் கூடியது. இது உட்கட்சி பிரச்சனை. இதை அவர்கள் தான் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.


அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கட்சியில் பூசல் ஏற்பட்டு, பிரிவு உண்டானது. ஓபிஸ் மற்றும் இபிஎஸ் இடையே பிரச்சனை வலுக்க ஆரம்பித்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அதன்பின்னர் அதிமுக எனக்குது தான் சொந்தம் என்று மாறி மாறி கூறிவந்தனர். இது தொடர்பாக வழக்குகளும் பதியப்பட்டு நடந்தது. இந்நிலையில், சமீபகாலமாகவே இபிஎஸ் செயல்பாடுகளிலில் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்து வந்தார்.


இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் கோபிச்செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசினார் செங்கோட்டையன். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், செப்டம்பர் 05ம் தேதி மனம் திறந்து பேச உள்ளதாகவும், அதுவரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இது குறித்து இன்று காலை அவர் பேசுகையில், நான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே கட்சியில் முக்கிய பொறுப்புக்களில் இருந்து வருகிறேன். எனக்கு இரண்டு வாய்ப்புகள் வந்த போதும் அதிமுக.,வின் நலன் கருதியே நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். 




அதிமுக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்ந்து மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும் என்றால் அதற்கு கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும். கட்சி ஒன்றுபட்டால் மட்டுமே அதிமுக.,வால் மீண்டும் வெற்றி பெற முடியும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதற்காக நான், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் 6 பேர் பொதுச் செயலாளரை சென்று ஆறு மாதங்களுக்கு முன்பு சந்தித்து வலியுறுத்தினோம். ஆனால் அதை அவர் மறுத்து விட்டார். அதனாலேயே அவரது கூட்டங்களை நான் தவிர்த்து வருகிறேன். 


மறப்போம், மன்னிப்போம் என அதிமுக தலைவர்கள் வழியில் செயல்பட்டு, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை அரவணைத்து, ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். இன்று தென் மாவட்டங்களில் அதிமுக.,வின் நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். இன்னும் 10 நாட்களில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஒருமித்த கருத்து கொண்டவர்களை ஒன்றிணைத்து தேர்தலை எதிர்கொள்ளும் முயற்சிகளில் இறங்குவோம். பிரிந்தவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளாத வரை எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார சுற்றுப் பயணங்களில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்றார் என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், செங்கோட்டையன் கருத்திற்கு பல்வேறு கட்சியினை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இது குறித்து பேசுகையில், இது உட்கட்சி விவகாரம். அதிமுகவை சேர்ந்தவர்கள் கூடி பேசி எடுக்க வேண்டிய முடிவு. அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் வரவேற்கத்தக்கதாக இருக்கும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது தான் நமது பழமொழி. எல்லாரும் ஒற்றுமையாக இருத்தல் என்பது வரவேற்கக் கூடியது. இது உட்கட்சி பிரச்சனை. இதை அவர்கள் தான் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

news

குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்

news

அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

news

கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்