விஜயகாந்த் மறைந்து 48 நாள்.. நினைவிடத்தில் அஞ்சலி பாடலை வெளியிட்டார்.. பிரேமலதா விஜயகாந்த்!

Feb 13, 2024,06:30 PM IST

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து 48 நாள் ஆவதையொட்டி, இன்று விஜயகாந்த் நினைவு அஞ்சலிக்கான முதல் பாடலாக "காணாம தேடுறோம் " என்ற இசை ஆல்பத்தை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.


தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி காலமானார். சென்னையில் உள்ள தனியார் முருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மறைவு ஒட்டுமொத்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், உள்ளிட்ட பலரையும் சோகத்தில் மூழ்கடித்தது. தற்போது வரை விஜயகாந்த் மறைவிலிருந்து அவரது ரசிகர்கள் மற்றும் தேமுதிக கட்சி தொண்டர்கள் மீண்டு வராத நிலையில் உள்ளனர். தினந்தோறும் அவருடைய நினைவிடத்தில் தானாக முன்வந்து அன்னதானம் வழங்கியும் வருகின்றனர்.


விஜயகாந்த் இருந்த வரை அவர் செய்த  உதவிகள் என்ன என்று கூட தெரியாமல் இருந்தது. அவர் மறைவிற்கு பின்னர் தான் அவருடைய உதவும் தன்மை பலருக்கும் தெரிந்தது. சாமானிய  மக்களில்  தொடங்கி, இன்று திரைத்துறையில் பிரபலமாக உள்ளவர்கள் வரை அவர் உதவி செய்துள்ளார். இப்படி அவர் செய்த உதவிகள் ஏராளம் என்றே சொல்லலாம். இப்படிப்பட்டவர் மறைந்து இன்றுடன் 48 நாட்கள் ஆகின்றன.




இதனை அனுசரிக்கும் விதமாக காணாமல் தேடுகிறோம் கேப்டனை என்கிற இசை ஆல்பத்தை பிரேமலதா விஜயகாந்த் அவரது நினைவிடத்தில் இன்று வெளியிட்டார். கேப்டன் விஜயகாந்த் நினைவு அஞ்சலிக்கான முதல் பாடலாக "காணாம தேடுறோம் கேப்டனை"... இசை ஆல்பத்தை, பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் 48வது நாளான இன்று, அவரது நினைவிடத்தில் வெளியிட்டார்!


குணாஜீ இயக்கத்தில், கெவின் டிகோஸ்டா இசையில், இசைப்பிரியன் பாடல் வரிகளை, ஜாக் அருணாசலம் பாடி, தயாரித்துள்ளார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். கர்நாடகாவை சார்ந்த ஜமால் உசேன் உலகம் முழுவதும் வெளியிட்டுள்ளார். நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் பாடல் ஒளிபரப்பப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

புதுவருட டைரி!

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்