சுகோய் போர்விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.. !

Apr 08, 2023,11:51 AM IST
டெல்லி:  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று சுகோய் 30 போர் விமானத்தில் பறந்து அசத்தினார்.

சுகோய் போர் விமானத்தில் பறந்த 3வது இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல் ஆகியோர் சுகோய் விமானத்தில் பறந்துள்ளனர். அதேபோல பாதுகாப்பு அமைச்சர்களாக இருந்த நிர்மலா சீதாராமன், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரும் பறந்துள்ளனர்.



இந்த வரிசையில், திரவுபதி முர்மு இன்று போர் விமானத்தில் பயணித்தார். அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூர் விமானப்படைத் தளத்திலிருந்து சுகோய் விமானத்தில் பறந்தார் திரவுபதி முர்மு. விமானிகள் அணியும் பாதுகாப்பு உடையை அணிந்து கொண்டு சுகோய் விமானத்தில் பயணித்தார் குடியரசுத் தலைவர்.

கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் சுகோய் போர் விமானத்தில் பயணித்தார். அவருக்கு அடுத்த பெண் குடியரசுத் தலைவராக திரவுபதி முர்��ு இன்று போர் விமானத்தில் பறந்தார்.

2 சீட் கொண்ட சுகோய் 30 போர் விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அதி நவீன போர் விமானமாகும்.  ரஷ்யாவிடம் லைசன்ஸ் பெற்று இந்தியாவில் இது கட்டமைக்கப்படுகிறது. விமானி போர் விமானத்தை ஓட்ட அவருக்கு அருகில் அமர்ந்து பயணித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்