சுகோய் போர்விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.. !

Apr 08, 2023,11:51 AM IST
டெல்லி:  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று சுகோய் 30 போர் விமானத்தில் பறந்து அசத்தினார்.

சுகோய் போர் விமானத்தில் பறந்த 3வது இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல் ஆகியோர் சுகோய் விமானத்தில் பறந்துள்ளனர். அதேபோல பாதுகாப்பு அமைச்சர்களாக இருந்த நிர்மலா சீதாராமன், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரும் பறந்துள்ளனர்.



இந்த வரிசையில், திரவுபதி முர்மு இன்று போர் விமானத்தில் பயணித்தார். அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூர் விமானப்படைத் தளத்திலிருந்து சுகோய் விமானத்தில் பறந்தார் திரவுபதி முர்மு. விமானிகள் அணியும் பாதுகாப்பு உடையை அணிந்து கொண்டு சுகோய் விமானத்தில் பயணித்தார் குடியரசுத் தலைவர்.

கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் சுகோய் போர் விமானத்தில் பயணித்தார். அவருக்கு அடுத்த பெண் குடியரசுத் தலைவராக திரவுபதி முர்��ு இன்று போர் விமானத்தில் பறந்தார்.

2 சீட் கொண்ட சுகோய் 30 போர் விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அதி நவீன போர் விமானமாகும்.  ரஷ்யாவிடம் லைசன்ஸ் பெற்று இந்தியாவில் இது கட்டமைக்கப்படுகிறது. விமானி போர் விமானத்தை ஓட்ட அவருக்கு அருகில் அமர்ந்து பயணித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்