சுகோய் போர்விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.. !

Apr 08, 2023,11:51 AM IST
டெல்லி:  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று சுகோய் 30 போர் விமானத்தில் பறந்து அசத்தினார்.

சுகோய் போர் விமானத்தில் பறந்த 3வது இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல் ஆகியோர் சுகோய் விமானத்தில் பறந்துள்ளனர். அதேபோல பாதுகாப்பு அமைச்சர்களாக இருந்த நிர்மலா சீதாராமன், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரும் பறந்துள்ளனர்.



இந்த வரிசையில், திரவுபதி முர்மு இன்று போர் விமானத்தில் பயணித்தார். அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூர் விமானப்படைத் தளத்திலிருந்து சுகோய் விமானத்தில் பறந்தார் திரவுபதி முர்மு. விமானிகள் அணியும் பாதுகாப்பு உடையை அணிந்து கொண்டு சுகோய் விமானத்தில் பயணித்தார் குடியரசுத் தலைவர்.

கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் சுகோய் போர் விமானத்தில் பயணித்தார். அவருக்கு அடுத்த பெண் குடியரசுத் தலைவராக திரவுபதி முர்��ு இன்று போர் விமானத்தில் பறந்தார்.

2 சீட் கொண்ட சுகோய் 30 போர் விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அதி நவீன போர் விமானமாகும்.  ரஷ்யாவிடம் லைசன்ஸ் பெற்று இந்தியாவில் இது கட்டமைக்கப்படுகிறது. விமானி போர் விமானத்தை ஓட்ட அவருக்கு அருகில் அமர்ந்து பயணித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்