பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
வினேஷ் போகத் விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வினேஷ் போகத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், வினேஷ் போகத்தின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது. நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. தகுதி நீக்கம் ஏமாற்றத்தைத் தந்தாலும் 140 கோடி இதயங்களின் சாம்பியன் வினேஷ். அவரது காவியமான மன உறுதியும் பின்னடைவும் ஏற்கனவே இந்தியாவில் இருந்து வருங்கால உலக சாம்பியன்களை ஊக்குவிக்கிறது. எதிர்காலத்தில் அவருக்கு பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் குடியரசுத் தலைவர்.
அமைச்சர் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட பதிவில், ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மில்லியன் கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது. உலக சாம்பியனை வீழ்த்திய பெருமையுடன் அவர் பிராகசித்துக் கொண்டிருக்கிறார். விளையாட்டுத் துறையில் முன்மாதிரியாக திகழும் அவரது பயணத்தில் இது ஒரு தடை மட்டுமே. இதில் இருந்து அவர் மீண்டெழுந்து வெற்றியாளராக திகழ்வார் என்பதை உறுதியாக நம்புகிறேன். எங்கள் வாழ்த்தும், ஆதரவும் எப்போதும் அவருக்கு உண்டு என்று தெரிவித்துள்ளார்.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}