பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
வினேஷ் போகத் விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வினேஷ் போகத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், வினேஷ் போகத்தின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது. நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. தகுதி நீக்கம் ஏமாற்றத்தைத் தந்தாலும் 140 கோடி இதயங்களின் சாம்பியன் வினேஷ். அவரது காவியமான மன உறுதியும் பின்னடைவும் ஏற்கனவே இந்தியாவில் இருந்து வருங்கால உலக சாம்பியன்களை ஊக்குவிக்கிறது. எதிர்காலத்தில் அவருக்கு பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் குடியரசுத் தலைவர்.
அமைச்சர் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட பதிவில், ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மில்லியன் கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது. உலக சாம்பியனை வீழ்த்திய பெருமையுடன் அவர் பிராகசித்துக் கொண்டிருக்கிறார். விளையாட்டுத் துறையில் முன்மாதிரியாக திகழும் அவரது பயணத்தில் இது ஒரு தடை மட்டுமே. இதில் இருந்து அவர் மீண்டெழுந்து வெற்றியாளராக திகழ்வார் என்பதை உறுதியாக நம்புகிறேன். எங்கள் வாழ்த்தும், ஆதரவும் எப்போதும் அவருக்கு உண்டு என்று தெரிவித்துள்ளார்.
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
{{comments.comment}}