செங்கல்பட்டு: திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது. திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் எனக் கூறி உரையை தொடங்கினார். அதன்பின்னர் 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். சில நாட்களுக்கு முன் பாரத ரத்னா எம்ஜிஆரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினோம். தேச பக்தியும் வீரமும் தமிழர்களின் ரத்தத்தில் கலந்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ரூ.11 லட்சம் கோடி தமிழ்நாட்டுக்கு நிதி தரப்பட்டுள்ளது. மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது. திமுகவுக்கு கவுன்டவுன் துவங்கி விட்டது. தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்த, ஊழலற்ற ஆட்சி அமையும். தமிழ்நாடு மாற்றத்திற்கு தயாராகி விட்டது. தமிழகத்தில் தேஜ கூட்டணி குடும்பத்தின் மூத்த தலைவர்கள் இங்கு கூடியுள்ளனர். எல்லோரும் உறுதியாக இருப்பது என்னவெனில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே.

நீங்கள் திமுகவிற்கு இருமுறை வாய்ப்பளித்தீர்கள். ஆனால் அவர்கள் தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டார்கள். திமுக அரசை மக்கள் சிஎம்சி அரசு என்று அழைக்கிறார்கள். CMC என்றால் Corruption Mafia Crime ஆகும். செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் மிகச்சிறப்பாக செயலாற்றினார். வளர்ச்சி அடைந்த தமிழகத்தை உருவாக்க, இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பு அவசியம். ஆனால், திமுக இளைஞர்களை போதையின் கையில் ஒப்படைத்து விட்டது. பெற்றோர் கண்முன் குழந்தைகள் நாசமாகின்றனர். திமுக ஆட்சியில் போதை மாபியா செழிப்பாக உள்ளது.
நமது முருகப் பெருமானுக்கு விளக்குப்போடுவது விவாதப்பொருளாக்கப்பட்ட போது நமது தலைவர்கள் பக்தர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தார்கள். அவர்களுக்கு என் கரவொலி. திமுகவும், அவர்கள் கூட்டாளிகளும் வாக்கு வங்கியை குஷிப்படுத்த நீதிமன்றங்களைக்கூட அவமானப்படுத்தினார்கள். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூட்டணித் தலைவர்கள் ஒரே இடத்தில் கூடியுள்ளனர். தமிழ்நாட்டில் எவ்வளவு ஊழல் மலிந்துள்ளது என்பது சிறு குழந்தைக்கு கூட நன்றாக தெரியும். தமிழக மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு நிலையிலும் மத்திய அரசு துணையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}