"டான்" பிரியங்கா மோகன்.. முதன் முதலாக நடித்த தமிழ்ப் படம்.. விரைவில் ரிலீஸ்!

Dec 23, 2023,04:25 PM IST

சென்னை: டான், டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களைக் கொண்டுள்ள பிரியங்கா மோகன் தமிழில் முதன் முதலில் நடித்து இதுவரை வெளியாகாமல் இருக்கும் டிக்டாக் படம் விரைவில் திரைக்கு வரப் போவதாக ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது.




முதல் படம் இப்போதாவது வெளி வருகிறதே.. பிறகு ஏன் பரபரப்பு என்று கேட்கலாம். இருக்கே.. இப்படத்தில் கொஞ்சம் அப்படி இப்படி நடித்துள்ளாராம் பிரியங்கா மோகன். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியது. 




கன்னடம், தெலுங்கில் நடித்து வந்தவரான பிரியங்கா மோகன், தமிழில் அறிமுகமான முதல் படம் டிக் டாக்.  அப்போது பரபரப்பாக இருந்த டிக்டாக்கை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. எம்.கே. எண்டர்டெய்ன்மெண்ட்  நிறுவனம் சார்பில் மதன்குமார் தயாரித்துள்ள இப்படத்தில், ராஜாஜி என்பவர் நாயகனாகவும், சுஷ்மா ராஜேந்திரா நாயகியாகவும் நடித்துள்ளனர். பிரியங்கா மோகன் இன்னொரு நாயகியாக நடித்துள்ளார்.




ஆனால் இப்படம் இதுவரை வரவில்லை. இந்த நிலையில்தான் சிவகார்த்திகேயனுடன், டாக்டர் படத்தில் நடித்து பிரபலமானார் பிரியங்கா மோகன். அதைத் தொடர்ந்து அவருக்கு முன்னணி ஸ்டார்களுடன் நடிக்கும் வாய்ப்பு அதிகம் வந்தது.




தொடர்ந்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்துள்ளார் பிரியங்கா மோகன்.




இந்த நிலையில்தான் டிக்டாக் படத்தை திரைக்கு கொண்டு வர அந்தப் படக்குழு முடிவு செய்து களம் இறங்கியுள்ளதாம். இப்படத்தில் முத்தக் காட்சி உள்ளிட்டவற்றிலும் பிரியங்கா நடித்திருந்தாராம். எனவே இந்தப் படம் வந்தால் அவரது மார்க்கெட்டுக்கு டேமேஜ் ஆகி விடுமே என்று அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனராம்.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்