உழுது விளைந்த நிலம் ஊத்துத் தண்ணீ பாஞ்ச நிலம்

Jul 27, 2026,12:44 PM IST

- பி.எஸ். முருகேசன்


உழுது விளைந்த நிலம்

ஊத்துத் தண்ணீ பாஞ்ச நிலம்


ஊருக்கு அன்னம் தந்த 

உத்தமரு வாழ்ந்த நிலம்


காஞ்சு கிடக்கு தடா 

கழுதை வந்து மேயுதடா


உழவன் இடும் கண்ணீரு 

ஊத்தையும் தான் விஞ்சுதடா


சோத்துக்கு பஞ்சம் வரும் 

சோதனை காலமிதோ




காஞ்ச நிலமாகி

கருவாடு காயுதடா


தீஞ்ச நிலமாகி 

தீயும் எரியுதடா


குடிதண்ணீர் காசு ஆச்சு 

குடும்பமும் மோசம் ஆச்சு


வடிகஞ்சி பஞ்சம் வந்து 

வாட்டு தடா வாழ்க்கையிலே


ஊரு விட்டு ஊரு வந்து 

உழைக்கும் நிலையாச்சு


நாடு விட்டு நாடு போய் 

பிழைக்கும் நிலையாச்சு


உறவுகள் சொந்தம் எல்லாம் பிரியும் நிலை ஆச்சு


உதவியென போனோரை 

உதவாக்கரை என்பர்


உயிரான நண்பர்களே 

ஒதுங்கித் தான் போவார்கள்


பொல்லாத உலகில்

பொழைப்பது எவ்வாறு


பாலும் மழை பெஞ்சா 

பஞ்சமும் தீருமே


விவசாயி வாழ்க்கை 

விடியலாய் ஆகுமே


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்