- பி.எஸ். முருகேசன்
உழுது விளைந்த நிலம்
ஊத்துத் தண்ணீ பாஞ்ச நிலம்
ஊருக்கு அன்னம் தந்த
உத்தமரு வாழ்ந்த நிலம்
காஞ்சு கிடக்கு தடா
கழுதை வந்து மேயுதடா
உழவன் இடும் கண்ணீரு
ஊத்தையும் தான் விஞ்சுதடா
சோத்துக்கு பஞ்சம் வரும்
சோதனை காலமிதோ

காஞ்ச நிலமாகி
கருவாடு காயுதடா
தீஞ்ச நிலமாகி
தீயும் எரியுதடா
குடிதண்ணீர் காசு ஆச்சு
குடும்பமும் மோசம் ஆச்சு
வடிகஞ்சி பஞ்சம் வந்து
வாட்டு தடா வாழ்க்கையிலே
ஊரு விட்டு ஊரு வந்து
உழைக்கும் நிலையாச்சு
நாடு விட்டு நாடு போய்
பிழைக்கும் நிலையாச்சு
உறவுகள் சொந்தம் எல்லாம் பிரியும் நிலை ஆச்சு
உதவியென போனோரை
உதவாக்கரை என்பர்
உயிரான நண்பர்களே
ஒதுங்கித் தான் போவார்கள்
பொல்லாத உலகில்
பொழைப்பது எவ்வாறு
விவசாயி வாழ்க்கை
விடியலாய் ஆகுமே
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி
ஒத்தசடை போட்டு ஒரு ரோஜா காதோரம்!
தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்
யார் மேலோர்? யார் கீழோர்?
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
உழுது விளைந்த நிலம் ஊத்துத் தண்ணீ பாஞ்ச நிலம்
டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா
காமன்வெல்த் பழுதூக்குதல் ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் அறிவிப்பு
சிந்தனைச் சிதறல்.. கற்றுக் கொடுத்தோம்.. கற்றுக் கொள்கிறோம்.. காலத்தின் கட்டாயம்!
{{comments.comment}}