- கவிஞர் பி.எஸ்.முருகேசன்
தண்ணீர் குடம்
தூக்கி நான்
தள்ளாடி போகயில
கில்லாடி மச்சான் நீங்க
கிள்ளி விட்டு போறீங்க
வெக்கமாப் போச்சு மச்சான்
வெவரம் கெட்ட ஆளு
நீங்க
வீட்டுப் பக்கம் வந்தாக்க
வெலகி வெலகி போறீங்க

காட்டுப் பக்கம் நான் வரவா
கலந்து பேச சம்மதமா
சோத்து மூட்டை மச்சானே
சொல்லி விட்டு போறீகளா
சொந்தக்காரி எங்கூட
சோடி சேர வாறீகளா
கேடித் தனம் செய்யும் மச்சான்
கேட்குதா காதுல தான்
போலி வேசம் போடாதே
பொல்லாத சிறிக்கி நானு
பொசுக்குனு கோவம் வரும்
பாசம் இருந்தா பக்கம் வந்து
சொல்லு மச்சான்
நேசம் இருந்தாக்க
நின்னு கொஞ்சம் பேசு மச்சான்
ஏ மேல தோசம் இல்ல
என்னான்னு சொல்லு மச்சான்
கண்ணாகப் பாத்துக்கிறேன்
பொன்னான நேரமிது
புறப்பட்டு வாங்க மச்சான்
பொழுது மசங்கும் முன்ன
புன்னகையை தாங்க மச்சான்
ஏங்கிய ஏ மனசு
இளநீராய் குளிரும் மச்சான்
சந்தோசம் மிகுதியிலே
சரி கம பாடும் மச்சான்
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
எலும்பை உடைப்பதாக பேச்சு: திமுக எம்எல்ஏ., மார்க்கண்டேயன் கைது - 3 பிரிவுகளில் வழக்கு
"சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?" – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிரமடைந்த போராட்டம்: நாடாளுமன்ற கதவுகள் மூடல்
Monday Motivation: வாழ்த்த வயதில்லை என்போரே.. வசைமாரிப் பொழிய வயது தடையில்லையோ!
சிந்தனைச் சிதறல்.. தொடங்குவதற்கு முன்பு பலமுறை யோசியுங்கள்!
அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்.. மாணவர்களுக்கு பரிசு
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி? முதலமைச்சர் விஜயுடன் முக்கிய ஆலோசனை!
மாங்கனி நகராம் சேலத்தில் களை கட்டும்.. கோட்டை மாரியம்மன் ஆடி திருவிழா 2026
கல்விச் செம்மல்.. தாயுள்ளம் கொண்ட சேவைத் தாய்.. வாழ்த்துகள் மதனகுமாரி அம்மா!
{{comments.comment}}