ஸ்ரீஹரிகோட்டா: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று ஒத்திவைக்கப்பட்ட பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
புரோபா-3, கரோனா கிராப் என்ற இரு செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோள் சூரியனின் ஒளிவட்ட பாதையில் உள்ள பகுதிகளை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை சுமந்தபடி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து பி எஸ் எல் வி, சி 59 ராக்கெட் மூலம் நேற்று மாலை 4.08 மணி அளவில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக நேற்று முன்தினம் ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பப்பட்டு இறுதி கவுண்டவுன் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென கண்டறியப்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பி எஸ் எல் வி, சி 59 ராக்கெட் விண்ணில் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டு இன்று மாலை 4.12 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது.
மறுபக்கம், செயற்கைக்கோளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்ததை அடுத்து, ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் புரோபா-3, கரோனா கிராப் ஆகிய செயற்கைக்கோள் மூலம் பி எஸ் எல் வி, சி-59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது இரு செயற்கைக் கோள்களும் புவியின் நீள் வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
{{comments.comment}}