ஸ்ரீஹரிகோட்டா: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று ஒத்திவைக்கப்பட்ட பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
புரோபா-3, கரோனா கிராப் என்ற இரு செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோள் சூரியனின் ஒளிவட்ட பாதையில் உள்ள பகுதிகளை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை சுமந்தபடி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து பி எஸ் எல் வி, சி 59 ராக்கெட் மூலம் நேற்று மாலை 4.08 மணி அளவில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக நேற்று முன்தினம் ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பப்பட்டு இறுதி கவுண்டவுன் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென கண்டறியப்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பி எஸ் எல் வி, சி 59 ராக்கெட் விண்ணில் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டு இன்று மாலை 4.12 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது.
மறுபக்கம், செயற்கைக்கோளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்ததை அடுத்து, ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் புரோபா-3, கரோனா கிராப் ஆகிய செயற்கைக்கோள் மூலம் பி எஸ் எல் வி, சி-59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது இரு செயற்கைக் கோள்களும் புவியின் நீள் வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கரூர் துயர சம்பவம்... ஹேமமாலினி தலைமையில்... தேஜ கூட்டணியில் 8 பேர் கொண்ட குழு அமைப்பு
கரூர் கூட்ட நெரிசல்.. குற்றஞ்சாட்டப்பட்டவர்களே விசாரிக்கக்கூடாது.. சிபிஐ விசாரணை வேண்டும்: அன்புமணி
கரூரில் பாதிக்கப்பட்டோரை பார்க்க செல்கிறாரா விஜய்?... பாதுகாப்பு வழங்கக் கோரி மனு
டாக்டர் ராமதாஸை தைலாபுரம் சென்று சந்தித்த சி வி சண்முகம்.. அதிமுக கூட்டணியில் இணைவாரா?
கரூர் சம்பவத்திற்குப் பின்.. விஜய்யுடன் பேசிய முதல் தலைவர்.. ராகுல் காந்தி திடீர் பேச்சு ஏன்?
கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி
யாரைக் குறை கூறுவது...?? யார் மீது குற்றம் சாட்டுவது..?? மக்களுக்கு ஏன் இந்த சினிமா மயக்கம் ..??
{{comments.comment}}