புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 20 லட்சம் நிவாரணம் வழங்கி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி முத்தியால் பேட்டை, சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி ஆர்த்தி. இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி வெகு நேரமாகியும் காணவில்லை என்பதால், சிறுமியின் பெற்றோர் அப்பகுதியை சுற்றியும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. பல மணி நேரமாகியும் சிறுமி கிடைக்காததினால் அவரது பெற்றோர் முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். புகாரின் பேரில் போலீசாரும் பல இடங்களில் சிறுமியை தேடியுள்ளனர். தொடர்ந்து 4 நாட்களாக சிறுமியை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று சிறுமியின் உடல் அவரது வீட்டில் இருந்து 100 மீட்டார் தொலைவில் உள்ள ஒரு சாக்கடையில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. சிறுமி இறந்த நிலையில் அந்த மூட்டையில் இருந்துள்ளார். சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வழக்கை விசாரித்த போலீசார் 2 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
விவேகானந்தன் என்ற 57 வயதுடையவரும், கருணாஸ் என்ற 19 வயதுடையவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விருவர் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு புதுச்சேரி முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற வருகின்றன.
இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதிவழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். தற்போது பிரேதப் பிரிசோதனைக்குப் பின்னர் சிறுமியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறுமியை சீரழித்த அயோக்கியர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கித் தரப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சிறுமியின் குடும்பத்தினரிடம் உறுதி அளித்துள்ளார்.
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}