புதுச்சேரி.. துணை நிலை ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்து.. புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு

Jan 24, 2024,12:11 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனின், குடியரசு தின விழா தேனீர் விருந்தை திமுக புறக்கணிக்கும் என்று புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், யூனியன் பிரதேச திமுக தலைவருமான இரா. சிவா அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக இரா சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:




சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற முறையில் துணைநிலை ஆளுநர் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து தேனீர் விருந்து அளிப்பது என்பது மரபு. அந்த மரபின் அடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேனீர் விருந்துகளில் நானும் எங்கள் கழக சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று உள்ளோம். 


ஆனால் சமீபகாலமாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை என்பது பாஜக கொடி கட்டாத அலுவலகமாகவும், ஆளுநர் பாஜக தலைவர் போலும் செயல்படுகிறார். இச்செயல் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்று நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும், அவர் தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்து வருகிறார்.


ஆகவே, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் அவர்கள் விடுத்துள்ள குடியரசு தின விழா தேனீர் விருந்து அழைப்பை புதுச்சேரி மாநில திமுக புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டிலும் ஆளுநர் அளிக்கும் தேனீர் விருந்து நிகழ்ச்சிகளை ஆளும் திமுக புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது. இரு மாநிலங்களிலும் ஆளுநருக்கும், திமுகவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை. புதுச்சேரியில் ஆளும் என். ஆர். காங்கிரஸ் கட்சி, பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுடன் ஒத்துப் போய் செயல்படுவது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்