புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனின், குடியரசு தின விழா தேனீர் விருந்தை திமுக புறக்கணிக்கும் என்று புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், யூனியன் பிரதேச திமுக தலைவருமான இரா. சிவா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இரா சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற முறையில் துணைநிலை ஆளுநர் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து தேனீர் விருந்து அளிப்பது என்பது மரபு. அந்த மரபின் அடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேனீர் விருந்துகளில் நானும் எங்கள் கழக சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று உள்ளோம்.
ஆனால் சமீபகாலமாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை என்பது பாஜக கொடி கட்டாத அலுவலகமாகவும், ஆளுநர் பாஜக தலைவர் போலும் செயல்படுகிறார். இச்செயல் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்று நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும், அவர் தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்து வருகிறார்.
ஆகவே, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் அவர்கள் விடுத்துள்ள குடியரசு தின விழா தேனீர் விருந்து அழைப்பை புதுச்சேரி மாநில திமுக புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலும் ஆளுநர் அளிக்கும் தேனீர் விருந்து நிகழ்ச்சிகளை ஆளும் திமுக புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது. இரு மாநிலங்களிலும் ஆளுநருக்கும், திமுகவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை. புதுச்சேரியில் ஆளும் என். ஆர். காங்கிரஸ் கட்சி, பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுடன் ஒத்துப் போய் செயல்படுவது நினைவிருக்கலாம்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}