புதுச்சேரி: புதுச்சேரியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு ஒரே வாரத்தில் நீதி கிடைக்கும். விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் 9 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலையும் செய்துள்ளது. இதுதொடர்பாக கருணாஸ் மற்றும் விவேகானந்தன் என 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் சில மைனர் சிறுவர்களுக்கும் தொடர்புள்ளதாக தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சிறுமிக்கு நேர்ந்த கொடூரமான முடிவு, புதுச்சேரி மக்களை உலுக்கியுள்ளது. கொதித்துக் கொந்தளித்துப் போயுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் இன்று சிறுமியின் வீட்டுக்கு வருகை தந்தார். சிறுமியின் தாயாரைக் கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டு அவருக்கு ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து பின்னர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், புதுச்சேரியில் உயிரிழந்த 9-வயது சிறுமியின் உடலுக்கு கனத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தினேன். சிறுமியின் மரணத்தில் ஒரு தாயாக நான் நிலைகுலைந்து நிற்கிறேன். சிறுமிக்கு நடந்த கொடுமை மன்னிக்கவே முடியாத குற்றம். உணர்வு பூர்வமாக சிறுமியின் குடும்பத்தினருடன் துணை நிற்கிறேன். நியாயமான கோரிக்கைக்காக போராடும் புதுச்சேரி பொதுமக்களின் மனநிலையில் தான் நானும் இருக்கிறேன். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றார் டாக்டர் தமிழிசை.
அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் தமிழிசை பேசும்போது, ஒரே வாரத்தில் இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து தண்டனை வழங்கப்படும். ஒரே வாரத்தில் சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் என்று கூறினார் டாக்டர் தமிழிசை.
முன்னதாக அஞ்சலி செலுத்த வந்த டாக்டர் தமிழிசை செந்தரராஜனுக்கு எதிராக சிலர் கோஷமிட்டு திரும்பிப் போகுமாறு கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை அமைதிப்படுத்தினர். டாக்டர் தமிழிசையும் அதைப் பொருட்படுத்தாமல் சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி விட்டுத் திரும்பினார்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}