புதுச்சேரியில் கொடுமை.. பெண்ணைக் கொன்று.. வாழை இலையில் கட்டி வீசிய லாரி டிரைவர்!

Nov 12, 2024,04:51 PM IST


விழுப்புரம்:  கொடூரமாக தனது மனைவியை கொலை செய்துவிட்டு, அந்த கொலையை மறைப்பதற்காக வாழை இலையில் சுற்றி உடலை தமிழக எல்லையில் வீசிவிட்டு சென்றுள்ளார் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர். கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் உடல் தமிழக எல்லையில் மீட்கப்பட்டதால் புதுச்சேரி போலீசார் தமிழக போலீசாரிடம் வழக்கை ஒப்படைத்துள்ளனர். 


புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான திருவக்கரையில் வாழை இலையில் சுற்றிய பெண்ணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த  அப்பகுதி  மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது இந்த பெண் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 




கொலை செய்யப்பட்ட பெண் யார்.. எதற்காக கொலை செய்யப்பட்டார்.. என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்தப் பெண் புதுச்சேரியை சேர்ந்த இளவரசி என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணை  தீவிர படுத்தப்பட்ட நிலையில் இந்தப் பெண்ணின் கணவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கின்ற தகவல்கள் அம்பலமாகி உள்ளன.


அதன்படி கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்த பெண் புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட வடுவாகுப்பம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த இளவரசி. இவரது கணவர் ராஜீவ். அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அப்பகுதியில் வசிக்கும் லாரி ஓட்டுனரான ராஜ் என்ற கிருஷ்ணப்பனுடன் இளவரசிக்கு காதல் மலரவே இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் கணவர் ராஜீவிற்கு  தெரிய வர, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பானது. ராஜீவ்  தாறுமாறாக அடித்ததில்  இளவரசி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து என்ன செய்வதென்றே அறியாத ராஜீ   இளவரசியின் உடலை வாழை இலையில் வைத்து கட்டி புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான திருவக்கரையில் வீசி விட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.


உடல் கிடந்த இடம் தமிழகப் பகுதி என்பதால் வானூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜீவை அழைத்துச் சென்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்