- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
புதியதோர் உலகம் செய்வோம் ..!!
புத்தம் புது பூமியை படைப்போம் ..!!
பழையன கழிந்து, புதியன புகுந்து வர,
சமத்துவம் ஓங்கி, சந்தோசம் நிறைந்திட ,
ஜாதி மத ஏற்றத்தாழ்வுகள் அகன்றிட,
ஆண் பெண் சரிநிகர் சமானமாகிட,
அறியாமை அகன்று, அறிவொளி வீச,
அமைதி நிலைத்து, ஆனந்தம் பெருக,
அன்பை பெருக்கி, அறத்தை வளர்க்க ,
மனிதன் உயர்ந்து, மனித நேயம் தலைக்க,
இயற்கையோடு இணைந்து, இசைவுடன் வாழ,
நம்பிக்கை நாற்றுநட்டு, நல்எதிர்காலம் படைக்க,
புதியதோர் உலகம் செய்வோம் ..!!
புவியின் மக்களை மகிழ்விப்போம்..!!

அங்கு பசியும் இல்லை. பிணியும் இல்லை .
ஏழ்மையும் இல்லை. ஏற்றத்தாழ்வும் இல்லை .
துன்பமும் இல்லை. துயரமும் இல்லை.
ஜாதியும் இல்லை. மதமும் இல்லை .
பாலியல் வன்கொடுமை அற்ற உலகம் .
சமமான வேலை வாய்ப்புள்ள உலகம் .
நல்ல இயற்கைசூழல் மிகுந்த புதிய உலகம் .
நெகிழி அற்ற அற்புத உலகம் .
படைத்து புதியதோர் உலகம் செய்வோம்..!!
பாரதிதாசனின் கனவினை நனவாக்குவோம்..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}