- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
புதியதோர் உலகம் செய்வோம் ..!!
புத்தம் புது பூமியை படைப்போம் ..!!
பழையன கழிந்து, புதியன புகுந்து வர,
சமத்துவம் ஓங்கி, சந்தோசம் நிறைந்திட ,
ஜாதி மத ஏற்றத்தாழ்வுகள் அகன்றிட,
ஆண் பெண் சரிநிகர் சமானமாகிட,
அறியாமை அகன்று, அறிவொளி வீச,
அமைதி நிலைத்து, ஆனந்தம் பெருக,
அன்பை பெருக்கி, அறத்தை வளர்க்க ,
மனிதன் உயர்ந்து, மனித நேயம் தலைக்க,
இயற்கையோடு இணைந்து, இசைவுடன் வாழ,
நம்பிக்கை நாற்றுநட்டு, நல்எதிர்காலம் படைக்க,
புதியதோர் உலகம் செய்வோம் ..!!
புவியின் மக்களை மகிழ்விப்போம்..!!

அங்கு பசியும் இல்லை. பிணியும் இல்லை .
ஏழ்மையும் இல்லை. ஏற்றத்தாழ்வும் இல்லை .
துன்பமும் இல்லை. துயரமும் இல்லை.
ஜாதியும் இல்லை. மதமும் இல்லை .
பாலியல் வன்கொடுமை அற்ற உலகம் .
சமமான வேலை வாய்ப்புள்ள உலகம் .
நல்ல இயற்கைசூழல் மிகுந்த புதிய உலகம் .
நெகிழி அற்ற அற்புத உலகம் .
படைத்து புதியதோர் உலகம் செய்வோம்..!!
பாரதிதாசனின் கனவினை நனவாக்குவோம்..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}