நுலுலபா: பிஜி தீவு அருகே உள்ள டோங்கா தீவில் இன்று காலை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகினது.
தென் பசிபிக் பெருங்கடலில் பிஜி தீவு அருகே உள்ளது டோங்கா தீவு. இந்த தீவில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நாட்டில் பலவேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. அதிலும் சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளன. இப்பகுதி 177 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும். இதில் 52 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர்.
டோங்கா தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 என்று பதிவாகினது. இதனை ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் ரோடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அத்துடன் பள்ளிகளுக்கு அங்குள்ள அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உரைந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிஜி தீவுகளின் தெற்குப் பகுதியில் 7 ரிக்டர் அளவிலும், டோங்கா தீவின் ஹிஹிபா நகரில் 6.0 என்ற ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது குறிப்படத்தக்கதாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}