சென்னை: அரசுப் பள்ளியில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை இன்றுடன் நிறைவு பெற்றது. நாளை 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்குகிறது.
காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டிருந்தது. மிலாடி நபி, காந்தி ஜெயந்தி ஆகியவை முடிந்த நிலையில் இன்றோடு விடுமுறைகள் முடிவுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து அரசு பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை 6 முதல் 12 வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்குகின்றன.
1 முதல் 5 வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வருகிற 8 ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 9ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
காலாண்டு விடுமுறை முடிவடைவதையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் போயிருந்தோர் மீண்டும் தத்தமது ஊர்களிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து கொண்டுள்ளனர். அதேபோல பல்வேறு ஊர்களிலும் அவரவர் வீடுகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இனி அடுத்து மழைக்காலம் தொடங்கவுள்ளதால் அடிக்கடி லீவு கிடைக்கலாம் என்ற "நம்பிக்கை"யுடன் மாணவ, மாணவியர் நாளை முதல் வகுப்புகளுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
{{comments.comment}}