சென்னை: அரசுப் பள்ளியில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை இன்றுடன் நிறைவு பெற்றது. நாளை 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்குகிறது.
காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டிருந்தது. மிலாடி நபி, காந்தி ஜெயந்தி ஆகியவை முடிந்த நிலையில் இன்றோடு விடுமுறைகள் முடிவுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து அரசு பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை 6 முதல் 12 வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்குகின்றன.
1 முதல் 5 வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வருகிற 8 ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 9ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
காலாண்டு விடுமுறை முடிவடைவதையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் போயிருந்தோர் மீண்டும் தத்தமது ஊர்களிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து கொண்டுள்ளனர். அதேபோல பல்வேறு ஊர்களிலும் அவரவர் வீடுகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இனி அடுத்து மழைக்காலம் தொடங்கவுள்ளதால் அடிக்கடி லீவு கிடைக்கலாம் என்ற "நம்பிக்கை"யுடன் மாணவ, மாணவியர் நாளை முதல் வகுப்புகளுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}