அதுக்குள்ள முடிஞ்சு போச்சே.. காலாண்டு லீவு.. நாளை மீண்டும் பள்ளிகள் திறப்பு!

Oct 02, 2023,04:42 PM IST

சென்னை: அரசுப் பள்ளியில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை இன்றுடன் நிறைவு பெற்றது. நாளை 6 முதல் 12 ஆம் வகுப்பு  வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்குகிறது.


காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டிருந்தது. மிலாடி நபி, காந்தி ஜெயந்தி ஆகியவை முடிந்த நிலையில் இன்றோடு விடுமுறைகள் முடிவுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து அரசு  பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை 6 முதல் 12 வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்குகின்றன.


1 முதல் 5 வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு  வருகிற 8 ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 9ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.


காலாண்டு விடுமுறை முடிவடைவதையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் போயிருந்தோர் மீண்டும் தத்தமது ஊர்களிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து கொண்டுள்ளனர். அதேபோல பல்வேறு ஊர்களிலும் அவரவர் வீடுகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.


இனி அடுத்து மழைக்காலம் தொடங்கவுள்ளதால் அடிக்கடி லீவு கிடைக்கலாம் என்ற "நம்பிக்கை"யுடன் மாணவ, மாணவியர் நாளை முதல் வகுப்புகளுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்