சென்னை: அரசுப் பள்ளியில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை இன்றுடன் நிறைவு பெற்றது. நாளை 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்குகிறது.
காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டிருந்தது. மிலாடி நபி, காந்தி ஜெயந்தி ஆகியவை முடிந்த நிலையில் இன்றோடு விடுமுறைகள் முடிவுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து அரசு பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை 6 முதல் 12 வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்குகின்றன.
1 முதல் 5 வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வருகிற 8 ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 9ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
காலாண்டு விடுமுறை முடிவடைவதையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் போயிருந்தோர் மீண்டும் தத்தமது ஊர்களிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து கொண்டுள்ளனர். அதேபோல பல்வேறு ஊர்களிலும் அவரவர் வீடுகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இனி அடுத்து மழைக்காலம் தொடங்கவுள்ளதால் அடிக்கடி லீவு கிடைக்கலாம் என்ற "நம்பிக்கை"யுடன் மாணவ, மாணவியர் நாளை முதல் வகுப்புகளுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}