ராஜ்கோட்: இந்திய பந்து வீச்சாளர்களில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆர். அஸ்வின் பெற்றுள்ளார். இதற்கு முன்பு அனில் கும்ப்ளே அந்த சாதனையைப் படைத்திருந்தார். இருவருமே சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது கூடுதல் தகவலாகும்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில்தான் அஸ்வின் தனது 500வது விக்கெட்டைச் சாய்த்து அசத்தினார். இதற்கு முன்பு இந்த சாதனையைச் செய்தவரான அனில் கும்ப்ளே மொத்தம் 619 டெஸ்ட் விக்கெட்களைச் சாய்த்துள்ளார். இந்த சாதனையை அஸ்வினால் முறியடிக்க முடியுமா என்று தெரியவில்லை.
37வது வயதான அஸ்வின் தனது டெஸ்ட் விக்கெட் சாதனையை 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் நிகழ்த்தினார். அவரது 500வது விக்கெட்டாக அமைந்தவர் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி ஆவார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}