ராஜ்கோட்: இந்திய பந்து வீச்சாளர்களில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆர். அஸ்வின் பெற்றுள்ளார். இதற்கு முன்பு அனில் கும்ப்ளே அந்த சாதனையைப் படைத்திருந்தார். இருவருமே சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது கூடுதல் தகவலாகும்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில்தான் அஸ்வின் தனது 500வது விக்கெட்டைச் சாய்த்து அசத்தினார். இதற்கு முன்பு இந்த சாதனையைச் செய்தவரான அனில் கும்ப்ளே மொத்தம் 619 டெஸ்ட் விக்கெட்களைச் சாய்த்துள்ளார். இந்த சாதனையை அஸ்வினால் முறியடிக்க முடியுமா என்று தெரியவில்லை.

37வது வயதான அஸ்வின் தனது டெஸ்ட் விக்கெட் சாதனையை 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் நிகழ்த்தினார். அவரது 500வது விக்கெட்டாக அமைந்தவர் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி ஆவார்.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}