சென்னை: இந்திய கிரிக்கெட்டை எனது நெஞ்சில் பச்சை குத்தி வச்சிருக்கேன் என்று கூறியுள்ளார் சுழற்பந்து வீச்சாளரும், ஆல் ரவுண்டருமான ஆர். அஸ்வின்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அஸ்வினை நீக்கி விட்டு ரவீந்திர ஜடேஜா, அக்ஸார் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் அடங்கிய சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்துள்ளனர். அனைவருமே இடது கை பந்து வீச்சாளர்கள் ஆவர்.
லெக் ஸ்பின்னரான யுஸ்வேந்திர சஹல் மற்றும் ஆப் ஸ்பின்னரான அஸ்வின் அணியில் சேர்க்கப்படாதது விவாதங்களைக் கிளப்பியுள்ளது. அஸ்வினை சேர்க்காமல் விட்டது தவறு. இப்படித்தான் உலகக் கோப்பை டெஸ்ட் இறுதிப் போட்டியிலும் அஸ்வினை சேர்க்காமல் கடைசியில் இந்தியா மிகப் பெரும் தடுமாற்றத்தை சந்தித்தது. கோப்பையையும் வெல்லத் தவறியது என்று பலரும் சுட்டிக் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணித் தேர்வை ஆதரித்து அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தோல்விகளையும் கொடுத்துள்ளேன், வெற்றிகளையும் கொடுத்துள்ளேன். எதுவாக இருந்தாலும் இந்திய கிரிக்கெட்டை எனது நெஞ்சில் பச்சை குத்தி வைத்துள்ளேன். அவர்களுக்கு எனது சேவை நாளையே தேவைப்பட்டாலும் கூட நான் செல்வதற்குத் தயாராகவே இருக்கிறேன். எனது 100 சதவீத பங்களிப்பை நிச்சயம் அளிப்பேன்.
இப்போதைய நிலையில் அக்ஸார் பட்டேலிடமிருந்து நாம் நிறைய எதிர்பார்க்கிறோம். அவருக்கு நல்ல ஸ்பேஸ் தரப்பட வேண்டியது அவசியம். ஒரு வேளை அக்ஸார் சரியாக செய்யாவிட்டாமல், செய்ய முடியாமல் போனால் ஷர்துள் தாக்குர் கை கொடுக்க வேண்டும். 5 அல்லது 6 ஓவர்கள் அல்லது 8 ஓவர்கள், 2 அல்லது 3 விக்கெட் எடுத்தால் நன்றாக இருக்கும்.
அக்ஸார் படேலுக்கு ஒவ்வொரு போட்டியிலும் 10 ஓவர் கிடைக்குமா என்று சொல்லமுடியாது. அதேசமயம், அவருக்கு அதிக அளவிலான ஓவர்கள் தொடர்ந்து கிடைத்தால் அவர் செட் ஆகி விடுவார். பிறகு விக்கெட்கள் ஈஸியாக வர ஆரம்பிக்கும்.
அணித் தேர்வு குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. அது எனது வேலையல்ல. வாழ்க்கையிலும் சரி, கிரிக்கெட்டிலும் சரி நான் எப்போதும் முழுமையாகத்தான் இருப்பேன், இருக்கிறேன். எந்தவிதமான நெகட்டிவிட்டியையும் என்னிடம் அண்ட விட மாட்டேன் என்றார் அஸ்வின்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}