ராஜ்கோட்: 3வது டெஸ்ட் போட்டியின் பாதியிலேயே அணியிலிருந்து விலகிய சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் தற்போது மீண்டும் அணியில் இணையவுள்ளதாக பிசிசிஐ கெளரவச் செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்து வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து கொண்டுள்ளது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் தலா ஒரு வெற்றியுடன் இரு அணிகளும் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் நகரில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அணியின் முக்கிய வீரரான ஆர். அஸ்வின் 2வது நாளிலேயே பிரேக் எடுத்துக் கொண்டு வெளியேறினார். குடும்பத்தில் ஏற்பட்ட மருத்துவ அவசரம் காரணமாக அவர் அணியிலிருந்து வெளியேறினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் 3வது டெஸ்ட் போட்டியில் இணையவுள்ளார் அஸ்வின்.

3வது டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில் அஸ்வின் இணையவுள்ளதாக ஜெய்ஷா தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் விளையாடுவார் என்றும் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.
வீரர்களின் குடும்பத்தின் நலன் மிக முக்கியமானது. இதை பிசிசிஐ எப்போதும் உணர்ந்திருக்கிறது. அஸ்வினுக்கு ஏற்பட்ட இந்த மருத்துவ அவசர தேவைச் சூழலில் அணி நிர்வாகம், சக வீரர்கள், ஊடகங்கள், ரசிகர்கள், பிசிசிஐ ஆகியோர் துணை நின்றோம். மீண்டும் அஸ்வின் களத்திற்குத் திரும்புவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார் ஜெய்ஷா.
அஸ்வின் மீண்டும் ஆட வருவதால் இந்திய அணியும் பலமடைந்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில்தான் அஸ்வின் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி புதிய மைல்ஸ்டோனை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
அமெரிக்காவில் குடும்பச் சண்டையில் விபரீதம்.. 3 பேருக்கு ஏற்பட்ட கதி.. பரபரப்பு சம்பவம்!
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன்.. நான் அரசியலையே தொழிலா பண்றவன்...கராத்தே பாபு பட டீசர் வெளியீடு!
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
தொடர்ந்து மக்களை புலம்ப வைத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
சந்தோஷம்!
{{comments.comment}}