Happy News: மீண்டும் அணியில் இணைகிறார் ஆர். அஸ்வின்.. 3வது டெஸ்ட் போட்டியின் 4வது நாளில்!

Feb 18, 2024,11:15 AM IST

ராஜ்கோட்: 3வது டெஸ்ட் போட்டியின் பாதியிலேயே அணியிலிருந்து விலகிய சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் தற்போது மீண்டும் அணியில் இணையவுள்ளதாக பிசிசிஐ கெளரவச் செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்து வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து கொண்டுள்ளது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் தலா ஒரு வெற்றியுடன் இரு அணிகளும் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் நகரில் நடந்து வருகிறது.


இந்த நிலையில் அணியின் முக்கிய  வீரரான ஆர். அஸ்வின் 2வது நாளிலேயே பிரேக் எடுத்துக் கொண்டு வெளியேறினார். குடும்பத்தில் ஏற்பட்ட மருத்துவ அவசரம் காரணமாக அவர் அணியிலிருந்து வெளியேறினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் 3வது டெஸ்ட் போட்டியில் இணையவுள்ளார் அஸ்வின்.




3வது டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில் அஸ்வின் இணையவுள்ளதாக ஜெய்ஷா தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் விளையாடுவார் என்றும் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.


வீரர்களின் குடும்பத்தின் நலன் மிக முக்கியமானது. இதை பிசிசிஐ எப்போதும் உணர்ந்திருக்கிறது. அஸ்வினுக்கு ஏற்பட்ட இந்த மருத்துவ அவசர தேவைச் சூழலில் அணி நிர்வாகம், சக வீரர்கள், ஊடகங்கள், ரசிகர்கள், பிசிசிஐ ஆகியோர் துணை நின்றோம். மீண்டும் அஸ்வின் களத்திற்குத் திரும்புவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார் ஜெய்ஷா.


அஸ்வின் மீண்டும் ஆட வருவதால் இந்திய அணியும் பலமடைந்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில்தான் அஸ்வின் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி புதிய மைல்ஸ்டோனை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்