ராஜ்கோட்: 3வது டெஸ்ட் போட்டியின் பாதியிலேயே அணியிலிருந்து விலகிய சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் தற்போது மீண்டும் அணியில் இணையவுள்ளதாக பிசிசிஐ கெளரவச் செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்து வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து கொண்டுள்ளது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் தலா ஒரு வெற்றியுடன் இரு அணிகளும் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் நகரில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அணியின் முக்கிய வீரரான ஆர். அஸ்வின் 2வது நாளிலேயே பிரேக் எடுத்துக் கொண்டு வெளியேறினார். குடும்பத்தில் ஏற்பட்ட மருத்துவ அவசரம் காரணமாக அவர் அணியிலிருந்து வெளியேறினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் 3வது டெஸ்ட் போட்டியில் இணையவுள்ளார் அஸ்வின்.

3வது டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில் அஸ்வின் இணையவுள்ளதாக ஜெய்ஷா தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் விளையாடுவார் என்றும் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.
வீரர்களின் குடும்பத்தின் நலன் மிக முக்கியமானது. இதை பிசிசிஐ எப்போதும் உணர்ந்திருக்கிறது. அஸ்வினுக்கு ஏற்பட்ட இந்த மருத்துவ அவசர தேவைச் சூழலில் அணி நிர்வாகம், சக வீரர்கள், ஊடகங்கள், ரசிகர்கள், பிசிசிஐ ஆகியோர் துணை நின்றோம். மீண்டும் அஸ்வின் களத்திற்குத் திரும்புவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார் ஜெய்ஷா.
அஸ்வின் மீண்டும் ஆட வருவதால் இந்திய அணியும் பலமடைந்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில்தான் அஸ்வின் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி புதிய மைல்ஸ்டோனை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}