சென்னை: நடிகர் தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இப்படத்தின் விமர்சனம் நன்றாக வந்து கொண்டிருப்பதால், இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் தனுஷ். ஆரம்பகால கட்டத்தில் தோற்றத்தை வைத்து பலரும் நிராகரித்த நிலையில் தனது நடிப்பின் திறமையால் படிப்படியாக முன்னேறி தற்போது பாலிவுட் ஹாலிவுட் வரை சென்று தனது நடிப்பை நிலை நாட்டியவர். இவர் ஒரு நடிகனாக மட்டுமல்லாமல் ஒரு பாடகனாக இயக்குனராக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக என பல திறமைகளை தன்னகத்தே கொண்டு பல தோற்றங்களாக பிரதிபலிக்கிறார். இப்படி தனுஷ் நடித்த படங்களில் இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

அந்த வகையில் தனுஷே இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் தான் ராயன். ஜூலை 28ஆம் தேதி இவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இப்படம் வெளியாகி அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ்புல் ஆனதால் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதில் பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே சூர்யா, இயக்குனர் செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
படம் இன்று காலை வெளியானது. படம் குறித்து நல்ல விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் ரசிகர்கள் வெடி வெடித்து, ஸ்வீட் கொடுத்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். தியேட்டர்களில் ஆட்டம் பாட்டமாக உள்ளது. சென்னையில் ரோகினி திரையரங்கிகளில் ஃபர்ஸ்ட் ஷோ கொண்டாட்டம் பட்டைய கிளப்பியது. இதில் நடிகர் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா, ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களைக் காண திரளான ரசிகர்கள் தலைவா தலைவா என கோஷம் எழுப்பி தங்களின் மகிழ்ச்சிகளை தெரிவித்தனர்.
இது மட்டுமல்லாமல் ராயன் படத்தை பார்த்த தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் உன்னை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கு தம்பி எனவும் பதிவிட்டுள்ளார்.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}