சென்னை: நடிகர் தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இப்படத்தின் விமர்சனம் நன்றாக வந்து கொண்டிருப்பதால், இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் தனுஷ். ஆரம்பகால கட்டத்தில் தோற்றத்தை வைத்து பலரும் நிராகரித்த நிலையில் தனது நடிப்பின் திறமையால் படிப்படியாக முன்னேறி தற்போது பாலிவுட் ஹாலிவுட் வரை சென்று தனது நடிப்பை நிலை நாட்டியவர். இவர் ஒரு நடிகனாக மட்டுமல்லாமல் ஒரு பாடகனாக இயக்குனராக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக என பல திறமைகளை தன்னகத்தே கொண்டு பல தோற்றங்களாக பிரதிபலிக்கிறார். இப்படி தனுஷ் நடித்த படங்களில் இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

அந்த வகையில் தனுஷே இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் தான் ராயன். ஜூலை 28ஆம் தேதி இவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இப்படம் வெளியாகி அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ்புல் ஆனதால் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதில் பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே சூர்யா, இயக்குனர் செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
படம் இன்று காலை வெளியானது. படம் குறித்து நல்ல விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் ரசிகர்கள் வெடி வெடித்து, ஸ்வீட் கொடுத்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். தியேட்டர்களில் ஆட்டம் பாட்டமாக உள்ளது. சென்னையில் ரோகினி திரையரங்கிகளில் ஃபர்ஸ்ட் ஷோ கொண்டாட்டம் பட்டைய கிளப்பியது. இதில் நடிகர் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா, ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களைக் காண திரளான ரசிகர்கள் தலைவா தலைவா என கோஷம் எழுப்பி தங்களின் மகிழ்ச்சிகளை தெரிவித்தனர்.
இது மட்டுமல்லாமல் ராயன் படத்தை பார்த்த தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் உன்னை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கு தம்பி எனவும் பதிவிட்டுள்ளார்.
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
{{comments.comment}}