டெல்லி: இந்தியாவின் மகள் வினேஷ் போகத். அவர் அத்தனை சீக்கிரம் விட்டுக் கொடுக்க மாட்டார். மீண்டும் வீறு கொண்டு களம் காண்பார். அவருக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் நீதி பெற்றுத் தரும் என்று நம்புகிறோம் என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், கூடுதல் எடையுடன் இருந்த காரணத்திற்காக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலால் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இந்த விவகாரம் இன்று லோக்சபாவிலும் எதிரொலித்தது.
இந்த நிலையில் வினேஷ் போகத் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்த கருத்து:
இந்தியாவின் பெருமையான வினேஷ் போகத் பல்வேறு உலக சாம்பியன்களை வீழ்த்தி விட்டு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். ஆனால் தொழில்நுட்ப காரணம் காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் துரதிர்ஷ்டமாகும்.
இந்தியாவின் மகளான வினேஷ் போகத்துக்கு தேவையான நீதியை பெற்றுத் தருவதற்கும், இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து உரிய முறையில் மேல் முறையீிடு செய்ய இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று முழுமையாக நம்ம்புகிறோம்.
வினேஷ் அத்தனை சீக்கிரம் விட்டுக் கொடுப்பவர் அல்ல. அவர் மேலும் வலுவுடன் மீண்டும் வீறு கொண்டு களம் காண்பார் என்று உறுதியாக நம்புகிறோம்.
வினேஷ், எப்போதும் நமது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். இன்றும் கூட உங்களுக்குத் துணையாக மொத்த நாடும் நிற்கிறது என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}