ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. ராகுல் காந்தி கடும் கண்டனம்.. நாளை மாயாவதி சென்னை விரைகிறார்!

Jul 06, 2024,05:34 PM IST

சென்னை:   தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டித்துள்ளார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்  படுகொலை சம்பவம் டெல்லி வரை எதிரொலித்துள்ளது. தேசியக் கட்சியின் தலித் தலைவர் இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பலரையும் அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்தை தற்போது காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக கண்டித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.




தமிழக அரசுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய முறையில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நாம் உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.


மாயாவதி சென்னை விரைகிறார்


இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங்  உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதிச் சடங்கில் பங்கேற்கவும் பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலை மாயாவதியே வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடும் உழைப்பாளியும், அர்ப்பணிப்புடன்  கூடியவருமான தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டுக்கு வெளியே கொலை செய்யப்பட்டிருப்பது சமுதாயத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


நிலைமையின் தீவிரம், சோகம் கருதி, நாளை காலை நான் சென்னை வருகிறேன்.  ஆம்ஸ்ட்ராங்குக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளேன். அனைவரும் அமைதியைக் கடைப்பிடித்து, கட்டுப்பாடு காக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மாயாவதி.


இதற்கிடையே பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்னர் ஆம்ஸ்ட்ராங்  உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது கட்சி அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று தெரிகிறது. அங்கு பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்கு உடல் வைக்கப்பட்டவுள்ளதாக தெரிகிறது. இதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்