மும்பை: மும்பையில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று நிறைவடைகிறது. இதையொட்டி பிரமாண்டக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மொத்தமாக பங்கேற்கவுள்ளனர்.
மணிப்பூரில் தொடங்கிய பாரத் நியாய யாத்திரை இன்றுடன் முடிவடைகிறது. கிட்டத்தட்ட 6700 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த யாத்திரையை நடத்தியுள்ளார் ராகுல் காந்தி. மும்பையில் இந்த யாத்திரையை இன்று ராகுல் காந்தி நிறைவு செய்கிறார்.
இதையொட்டி நிறைவு விழாவில் பங்கேற்குமாறு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே, சரத் பவார், ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
சிவாஜி பார்க்கில் நடைபெறும் பிரமாண்டக் கூட்டத்தில் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் கூட இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ஜனவரி 14ம் தேதி இம்பால் நகரிலிருந்து நியாய யாத்திரையைத் தொடங்கினார் ராகுல் காந்தி. 15 மாநிலங்களில் 100 லோக்சபா தொகுதிகள் வழியாக இந்த யாத்திரை மும்பை வந்து சேர்ந்துள்ளது. அஸ்ஸாம், மேற்கு வங்காளம், குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இதில் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்பதாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் நாட்டின் முதல் பிரதான பொதுக்கூட்டம் என்பதாலும் இதில் தலைவர்கள் பேசப் போவது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}