மும்பை: மும்பையில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று நிறைவடைகிறது. இதையொட்டி பிரமாண்டக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மொத்தமாக பங்கேற்கவுள்ளனர்.
மணிப்பூரில் தொடங்கிய பாரத் நியாய யாத்திரை இன்றுடன் முடிவடைகிறது. கிட்டத்தட்ட 6700 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த யாத்திரையை நடத்தியுள்ளார் ராகுல் காந்தி. மும்பையில் இந்த யாத்திரையை இன்று ராகுல் காந்தி நிறைவு செய்கிறார்.

இதையொட்டி நிறைவு விழாவில் பங்கேற்குமாறு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே, சரத் பவார், ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
சிவாஜி பார்க்கில் நடைபெறும் பிரமாண்டக் கூட்டத்தில் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் கூட இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ஜனவரி 14ம் தேதி இம்பால் நகரிலிருந்து நியாய யாத்திரையைத் தொடங்கினார் ராகுல் காந்தி. 15 மாநிலங்களில் 100 லோக்சபா தொகுதிகள் வழியாக இந்த யாத்திரை மும்பை வந்து சேர்ந்துள்ளது. அஸ்ஸாம், மேற்கு வங்காளம், குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இதில் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்பதாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் நாட்டின் முதல் பிரதான பொதுக்கூட்டம் என்பதாலும் இதில் தலைவர்கள் பேசப் போவது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}