யாத்திரையை முடிக்கும் ராகுல் காந்தி.. மும்பையில் முதல்வர் ஸ்டாலின்.. திரளும் "இந்தியா" தலைவர்கள்!

Mar 17, 2024,06:15 PM IST

மும்பை: மும்பையில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று நிறைவடைகிறது. இதையொட்டி பிரமாண்டக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மொத்தமாக பங்கேற்கவுள்ளனர்.


மணிப்பூரில் தொடங்கிய பாரத் நியாய யாத்திரை இன்றுடன் முடிவடைகிறது. கிட்டத்தட்ட 6700 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த யாத்திரையை நடத்தியுள்ளார் ராகுல் காந்தி. மும்பையில் இந்த யாத்திரையை இன்று ராகுல் காந்தி நிறைவு செய்கிறார்.




இதையொட்டி நிறைவு விழாவில் பங்கேற்குமாறு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே, சரத் பவார், ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.


சிவாஜி பார்க்கில் நடைபெறும் பிரமாண்டக் கூட்டத்தில் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் கூட இக்கூட்டத்தில்  பங்கேற்கவுள்ளனர். 


ஜனவரி 14ம் தேதி இம்பால் நகரிலிருந்து நியாய யாத்திரையைத் தொடங்கினார் ராகுல் காந்தி. 15 மாநிலங்களில் 100 லோக்சபா தொகுதிகள் வழியாக இந்த யாத்திரை மும்பை வந்து சேர்ந்துள்ளது. அஸ்ஸாம், மேற்கு வங்காளம், குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இதில் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்பதாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் நாட்டின் முதல் பிரதான பொதுக்கூட்டம் என்பதாலும் இதில் தலைவர்கள் பேசப் போவது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்