மும்பை: மும்பையில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று நிறைவடைகிறது. இதையொட்டி பிரமாண்டக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மொத்தமாக பங்கேற்கவுள்ளனர்.
மணிப்பூரில் தொடங்கிய பாரத் நியாய யாத்திரை இன்றுடன் முடிவடைகிறது. கிட்டத்தட்ட 6700 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த யாத்திரையை நடத்தியுள்ளார் ராகுல் காந்தி. மும்பையில் இந்த யாத்திரையை இன்று ராகுல் காந்தி நிறைவு செய்கிறார்.
இதையொட்டி நிறைவு விழாவில் பங்கேற்குமாறு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே, சரத் பவார், ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
சிவாஜி பார்க்கில் நடைபெறும் பிரமாண்டக் கூட்டத்தில் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் கூட இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ஜனவரி 14ம் தேதி இம்பால் நகரிலிருந்து நியாய யாத்திரையைத் தொடங்கினார் ராகுல் காந்தி. 15 மாநிலங்களில் 100 லோக்சபா தொகுதிகள் வழியாக இந்த யாத்திரை மும்பை வந்து சேர்ந்துள்ளது. அஸ்ஸாம், மேற்கு வங்காளம், குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இதில் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்பதாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் நாட்டின் முதல் பிரதான பொதுக்கூட்டம் என்பதாலும் இதில் தலைவர்கள் பேசப் போவது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}