வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆயிரக்கணக்கானோருடன் பேரணியாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கேரளாவில் உள்ள 20 தொகுதிக்கும் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வேட்புமனு தாக்கல் நாளை அதாவது ஏப்ரல் 4ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 8ஆம் தேதி கடைசி நாளாகும்.
கேரளாவில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 20 தொகுதிகளில், 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதம் உள்ள நான்கு தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இரண்டு தொகுதிகளிலும், கேரளா காங்கிரஸ் ஜேக்கப் கட்சி ஒரு தொகுதியிலும், ஆர் எஸ் பி கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் நாளை வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுவதால் ராகுல் காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வயநாடு தொகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன், பிரமாண்ட பேரணியாக சென்று பெருத்த, ஆரவாரத்துடன் வேட்புமனுவை தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அவருடன் சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
{{comments.comment}}