அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல்காந்தி

Mar 30, 2024,06:32 PM IST

டெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழக்கப்படும் என  அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வாக்குறுதி அளித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அளிவிப்பில், இந்திய மக்கள் தொகையில் பெண்களின் பங்கு 50 சதவீதம் இல்லையா? இந்த சூழலில், மேல் நிலை மற்றும் உயர் கல்வியில் பெண்களின் பங்கு 50% ஆக இருப்பது ஏன்? அவர்களின் பங்கு ஏன் குறைவாக உள்ளது? ஏன் இன்னும் 3ல் ஒரு பெண் மட்டுமே பணியில் இருக்கிறார். 10 அரசு வேலைகளுக்கான இடங்களில் ஒருவர் மட்டுமே பெண்ணாக இருப்பது ஏன்?  மக்கள் தொகையில் பாதியாக இருப்பவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. நாட்டை நடத்தும் அரசாங்கத்தில் பெண்களுக்கு சமமாக பங்களிப்பு இருந்தால் மட்டுமே பெண்களின் திறன் முழுமையாக பயன்படுத்தப்படும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.




எனவே, அனைத்து அரசு பணிகளிலும் 50% பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பாதுகாப்பான வருமானம், பாதுகாப்பான எதிர்காலம், ஸ்திரத்தன்மை மற்றும் சுய மரியாதை உள்ள பெண்கள் உண்மையிலேயே சமூகத்தின் சக்தியாக மாறுவார்கள். அரசு பதவிகளில் 50 சதவீத பெண்களை கொண்டிருப்பது நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் பலத்தை தரும். சக்தி வாய்ந்த பெண்கள் இந்தியாவில் தலைவிதியை மாற்றுவார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

news

தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்