டெல்லி: வயநாடு நிலச்சரிவு பாதிப்பை நேரில் காண வந்திருந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், அந்தத் தொகுதியின் முன்னாள் எம்.பியுமான ராகுல் காந்தி நேற்று நள்ளிரவு போட்ட டிவீட் டெல்லி அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
வயநாடு தொகுதியிலிருந்து 2 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகுல் காந்தி. 2வது முறையாக அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். அங்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து கவலை தெரிவித்திருந்த அவர் நேற்று தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் அங்கு சென்று பார்வையிட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவுக்கு மேல் இரவு 1.52 மணிக்கு அவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், நான் லோக்சபாவில் பேசிய சக்கரவியூக பேச்சை இருவரில் ஒருவர் விரும்பவில்லை போலும். எனக்கு எதிராக அமலாக்கத்துறை மூலம் ஒரு ரெய்டு நடத்தத் திட்டமிட்டு வருவதாக அமலாக்கத்துறை வட்டாரத்திலிருந்து எனக்குத் தகவல் வந்துள்ளது. திறந்த கரங்களுடன் அவர்களுக்காக காத்திருக்கிறேன்.. அமலாக்கத்துறையினரே டீ, பிஸ்கட்டுடன் நான் காத்திருக்கிறேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த எக்ஸ் பக்க பதிவு டெல்லியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் லோக்சபாவில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி அனல் பறக்கப் பேசினார். அப்போது இந்த நாட்டை தாமரை என்ற சக்கரவியூகம் சுற்றி வளைத்து வருகிறது. இதனால் விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சக்கரவியூகத்தை தகர்ப்போம் என்று பேசியிருந்தார் ராகுல் காந்தி. மேலும் பட்ஜெட் தொடர்பாக அவர் பேசிய பேச்சுக்களிலும் அனல் பறந்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையில் அடித்துக் கொள்வது போல பாவனை செய்ததும் வைரலானது நினைவிருக்கலாம்.
இந்த பின்னணியில்தான் இப்படி ஒரு டிவீட் போட்டுள்ளார் ராகுல் காந்தி. இதனால் டெல்லியில் அமலாக்கத்துறை ரெய்டு வரப் போகிறதா என்ற பரபப்பு கிளம்பியுள்ளது. 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்னர் பெரிய அளவில் அமலாக்கத்துறை ரெய்டுகள் நடக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}