டெல்லி: வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் எம்.பியாக தொடரவுள்ளதாகவும், வயநாடு தொகுதியில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா போட்டியிடுவார் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் கடந்த முறையும் அவர் அபார வெற்றி பெற்றிருந்தார். ரேபரேலி தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் முன்பு உறுப்பினர்களாக இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரு தொகுதிகளிலும் அவர் அபார வெற்றி பெற்றார். இதனால் எந்தத் தொகுதியை ராஜினாமா செய்வது என்பதில் ராகுல் காந்திக்கே குழப்பமாக உள்ளதாம். இரு தொகுதி மக்களும் எனது கடவுள்கள். எனவே இதை அவர்களே முடிவு செய்யட்டும் என்று சமீபத்தில் வயநாட்டில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியிருந்தார்.
தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் முடிவு

இந்த நிலையில், இன்று தனது முடிவை அறிவித்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்திய பின்னர் வயநாடு தொகுதியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
புதிய சாதனை படைக்கப் போகும் சோனியா குடும்பம்:
பிரியங்கா காந்தி இதுவரை தேர்தல்களில் போட்டியிட்டதில்லை. அவர் உ.பி மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவராக இருந்து வருகிறார். அவர் ரேபரேலி தொகுதியில்தான் போட்டியிடுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது அவரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அழைத்து வருகிறார்கள். பிரியங்கா காந்தி வயநாட்டில் வெற்றி பெற்றால் புதிய சாதனை ஒன்று படைக்கப்படும்.
வட இந்தியத் தலைவர்கள் யாரும் தெற்கில் போட்டியிட்டு வென்றதில்லை. சோனியா காந்திதான் அந்த சாதனையை முதலில் செய்தார். கர்நாடகத்தின் பெல்லாரி தொகுதியில் அவர் போட்டியிட்டு வென்றார். வலிமை வாய்ந்த சுஷ்மா சுவராஜைத் தோற்கடித்தவர் அவர். அதன் பின்னர் அவரது மகன் ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்டார். இப்போது அதே குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்காவும் வயநாட்டில் வெற்றி பெற்றால், தெற்கில் போட்டியிட்டு வென்ற முதல் வட இந்திய அரசியல் குடும்பம் என்ற பெருமை சோனியா குடும்பத்துக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}