டெல்லி: வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் எம்.பியாக தொடரவுள்ளதாகவும், வயநாடு தொகுதியில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா போட்டியிடுவார் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் கடந்த முறையும் அவர் அபார வெற்றி பெற்றிருந்தார். ரேபரேலி தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் முன்பு உறுப்பினர்களாக இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரு தொகுதிகளிலும் அவர் அபார வெற்றி பெற்றார். இதனால் எந்தத் தொகுதியை ராஜினாமா செய்வது என்பதில் ராகுல் காந்திக்கே குழப்பமாக உள்ளதாம். இரு தொகுதி மக்களும் எனது கடவுள்கள். எனவே இதை அவர்களே முடிவு செய்யட்டும் என்று சமீபத்தில் வயநாட்டில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியிருந்தார்.
தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் முடிவு

இந்த நிலையில், இன்று தனது முடிவை அறிவித்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்திய பின்னர் வயநாடு தொகுதியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
புதிய சாதனை படைக்கப் போகும் சோனியா குடும்பம்:
பிரியங்கா காந்தி இதுவரை தேர்தல்களில் போட்டியிட்டதில்லை. அவர் உ.பி மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவராக இருந்து வருகிறார். அவர் ரேபரேலி தொகுதியில்தான் போட்டியிடுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது அவரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அழைத்து வருகிறார்கள். பிரியங்கா காந்தி வயநாட்டில் வெற்றி பெற்றால் புதிய சாதனை ஒன்று படைக்கப்படும்.
வட இந்தியத் தலைவர்கள் யாரும் தெற்கில் போட்டியிட்டு வென்றதில்லை. சோனியா காந்திதான் அந்த சாதனையை முதலில் செய்தார். கர்நாடகத்தின் பெல்லாரி தொகுதியில் அவர் போட்டியிட்டு வென்றார். வலிமை வாய்ந்த சுஷ்மா சுவராஜைத் தோற்கடித்தவர் அவர். அதன் பின்னர் அவரது மகன் ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்டார். இப்போது அதே குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்காவும் வயநாட்டில் வெற்றி பெற்றால், தெற்கில் போட்டியிட்டு வென்ற முதல் வட இந்திய அரசியல் குடும்பம் என்ற பெருமை சோனியா குடும்பத்துக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. என்ன திட்டத்தில் இருக்கிறார் நடிகர் லாரன்ஸ்?
இந்திரஜித்!
{{comments.comment}}