சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள தமிழ்நாட்டுக்கு வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் வருகை காரணமாக நெல்லையில் இன்று முதல் ஏப்ரல் 13ஆம் தேதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி 40 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஆக மொத்தம் பத்து தொகுதியில் போட்டியிடுகிறது.

இந்த நிலையில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாளை பிரச்சாரம் செய்வதற்காக தமிழகத்திற்கு வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் நெல்லை உட்பட ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச இருக்கிறார்.
இங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியுடன் இணைந்து ஒரே மேடையில் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து,வாக்கு சேகரிக்க உள்ளனர்.
ட்ரோன்கள் பறக்க தடை:
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகையை ஒட்டி, இன்று காலை 6:00 மணி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி காலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக நெல்லை காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}