நெல்லையில் ராகுல் காந்தி நாளை பிரச்சாரம்.. 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை.. போலீஸ் அறிவிப்பு!

Apr 11, 2024,10:56 AM IST

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள தமிழ்நாட்டுக்கு வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் வருகை காரணமாக நெல்லையில் இன்று முதல் ஏப்ரல் 13ஆம் தேதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


லோக்சபா தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி 40 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஆக மொத்தம் பத்து தொகுதியில் போட்டியிடுகிறது.




இந்த நிலையில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாளை பிரச்சாரம் செய்வதற்காக தமிழகத்திற்கு வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் நெல்லை உட்பட ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச இருக்கிறார்.


இங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியுடன் இணைந்து ஒரே மேடையில் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து,வாக்கு சேகரிக்க உள்ளனர்.


ட்ரோன்கள் பறக்க தடை:


நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகையை ஒட்டி, இன்று காலை 6:00 மணி முதல்  ஏப்ரல் 13ஆம் தேதி காலை 6 மணி வரை ட்ரோன்கள்  பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக நெல்லை காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்