சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள தமிழ்நாட்டுக்கு வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் வருகை காரணமாக நெல்லையில் இன்று முதல் ஏப்ரல் 13ஆம் தேதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி 40 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஆக மொத்தம் பத்து தொகுதியில் போட்டியிடுகிறது.

இந்த நிலையில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாளை பிரச்சாரம் செய்வதற்காக தமிழகத்திற்கு வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் நெல்லை உட்பட ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச இருக்கிறார்.
இங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியுடன் இணைந்து ஒரே மேடையில் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து,வாக்கு சேகரிக்க உள்ளனர்.
ட்ரோன்கள் பறக்க தடை:
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகையை ஒட்டி, இன்று காலை 6:00 மணி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி காலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக நெல்லை காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}