சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள தமிழ்நாட்டுக்கு வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் வருகை காரணமாக நெல்லையில் இன்று முதல் ஏப்ரல் 13ஆம் தேதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி 40 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஆக மொத்தம் பத்து தொகுதியில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாளை பிரச்சாரம் செய்வதற்காக தமிழகத்திற்கு வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் நெல்லை உட்பட ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச இருக்கிறார்.
இங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியுடன் இணைந்து ஒரே மேடையில் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து,வாக்கு சேகரிக்க உள்ளனர்.
ட்ரோன்கள் பறக்க தடை:
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகையை ஒட்டி, இன்று காலை 6:00 மணி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி காலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக நெல்லை காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
{{comments.comment}}