சென்னை: மிச்சாங் புயல் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னும் மீளாததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகளின் முதல் இரு தேர்வு தேதிகளை அரசு மாற்றியமைத்துள்ளது.
மிச்சாங் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.

புயலால் ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் மழை நீர் தேங்கி, கடல் போல் காட்சி அளிக்கின்றன. புயல் சென்றாலும் புயல் ஏற்படுத்திய சேதாரங்கள் இன்னும் மாறவில்லை. பல பகுதிகளில் இடுப்பளவிற்கு மழைநீர் தேங்கி உள்ளதால் மின்சாரம், மொபைல் டவர், இணையதள சேவை ஆகியவை தொடர்ந்து முடங்கி உள்ளன. என்ன தான் அரசு விரைந்து செயல்பட்டாலும், மீட்பு பணி முடிந்த பாடில்லை. இயற்கை ஏற்படுத்திய பாதிப்பில் சிக்கிய சென்னை வாசிகளின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது.
அரையாண்டுத் தேர்வு தேதியில் மாற்றம்
இந்த மாவட்டங்களில் இயல்பு நிலைமை முழுமையாக திரும்ப இன்னும் ஒரு வாரமாவது ஆகும் என்று தெரிகிறது. இந்த நிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்த மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத் தேர்வுகளின் தேதிகளும் மாற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அரசு விடுத்துள்ள திருத்திய செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடர் மழையின் காரணமாக அனைத்து அரசு மற்றும் ஏஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல் நிலை வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணையில் 11.12.2023 முதல் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் அதே பாடத்திற்கான தேர்வுகள் நடைபெறும் எனவும், 7.12.2023 மற்றும் 8.12.2023 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் மட்டும் 14.12.2023 மற்றும் 20.12.2023 ஆகிய தேதிகளில் முறையே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாட்கள் தயாரிக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு 6 தாலுகா - காஞ்சிபுரத்தில் 2 தாலுகா விடுமுறை
செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரை, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், வண்டலூர், திருக்கழுக்குன்றம் தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில்.. குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}