கன மழை பாதிப்பு எதிரொலி.. அரையாண்டுத் தேர்வுகள்.. முதல் இரு தேர்வுகளின் தேதியில் மாற்றம்

Dec 06, 2023,06:54 PM IST

சென்னை:  மிச்சாங் புயல் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னும் மீளாததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகளின் முதல் இரு தேர்வு தேதிகளை அரசு மாற்றியமைத்துள்ளது.


மிச்சாங் புயல் பாதிப்பு காரணமாக  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.




புயலால் ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் மழை நீர் தேங்கி, கடல் போல் காட்சி அளிக்கின்றன. புயல் சென்றாலும் புயல் ஏற்படுத்திய சேதாரங்கள் இன்னும் மாறவில்லை. பல பகுதிகளில் இடுப்பளவிற்கு மழைநீர் தேங்கி உள்ளதால் மின்சாரம், மொபைல் டவர், இணையதள சேவை ஆகியவை தொடர்ந்து முடங்கி உள்ளன. என்ன தான் அரசு விரைந்து செயல்பட்டாலும், மீட்பு பணி முடிந்த பாடில்லை. இயற்கை ஏற்படுத்திய பாதிப்பில் சிக்கிய சென்னை வாசிகளின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது.


அரையாண்டுத் தேர்வு  தேதியில் மாற்றம்


இந்த மாவட்டங்களில் இயல்பு நிலைமை முழுமையாக திரும்ப இன்னும் ஒரு வாரமாவது ஆகும் என்று தெரிகிறது. இந்த நிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 


மேலும் இந்த மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத் தேர்வுகளின் தேதிகளும் மாற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக  அரசு விடுத்துள்ள திருத்திய செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:




தொடர் மழையின் காரணமாக அனைத்து அரசு மற்றும் ஏஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல் நிலை வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணையில் 11.12.2023 முதல் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் அதே பாடத்திற்கான தேர்வுகள் நடைபெறும் எனவும், 7.12.2023 மற்றும் 8.12.2023 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் மட்டும் 14.12.2023 மற்றும் 20.12.2023  ஆகிய தேதிகளில் முறையே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாட்கள் தயாரிக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செங்கல்பட்டு 6 தாலுகா - காஞ்சிபுரத்தில் 2 தாலுகா விடுமுறை


செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரை, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், வண்டலூர், திருக்கழுக்குன்றம் தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில்.. குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்