சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த ஒரு வாரத்துக்கு மிதமான மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த சீசனை யாராலும் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது என்பது போல வட மாவட்டங்களையும், தென் கோடி மாவட்டங்களையும் கன மழையும், பெரு வெள்ளமும் வந்து உலுக்கி எடுத்து விட்டன.
இந்த இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பின்னணியில் இன்று காலை முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், நாகப்பட்டனம், திருமருகல், தாராசுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, குற்றாலத்தில் ஐந்தருவியில் நீர் விழுவது இயல்பாகியுள்ளதால் அங்கு மக்கள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதேபோல திற்பரப்பு நீர்வீழ்ச்சியிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதேசமயம், மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது. அங்கு அதிக அளவில் தண்ணீர் கொட்டி வருவதால் தடை நீடிக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் மலை ரயில் போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது. இல்குரோ ரயில் நிலையப் பகுதியில், தண்டவாளத்தில் மண் சரிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடை நீடிக்கிறது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}