சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த ஒரு வாரத்துக்கு மிதமான மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த சீசனை யாராலும் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது என்பது போல வட மாவட்டங்களையும், தென் கோடி மாவட்டங்களையும் கன மழையும், பெரு வெள்ளமும் வந்து உலுக்கி எடுத்து விட்டன.
இந்த இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பின்னணியில் இன்று காலை முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.

தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், நாகப்பட்டனம், திருமருகல், தாராசுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, குற்றாலத்தில் ஐந்தருவியில் நீர் விழுவது இயல்பாகியுள்ளதால் அங்கு மக்கள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதேபோல திற்பரப்பு நீர்வீழ்ச்சியிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதேசமயம், மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது. அங்கு அதிக அளவில் தண்ணீர் கொட்டி வருவதால் தடை நீடிக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் மலை ரயில் போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது. இல்குரோ ரயில் நிலையப் பகுதியில், தண்டவாளத்தில் மண் சரிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடை நீடிக்கிறது.
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
{{comments.comment}}