சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த ஒரு வாரத்துக்கு மிதமான மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த சீசனை யாராலும் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது என்பது போல வட மாவட்டங்களையும், தென் கோடி மாவட்டங்களையும் கன மழையும், பெரு வெள்ளமும் வந்து உலுக்கி எடுத்து விட்டன.
இந்த இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பின்னணியில் இன்று காலை முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.

தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், நாகப்பட்டனம், திருமருகல், தாராசுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, குற்றாலத்தில் ஐந்தருவியில் நீர் விழுவது இயல்பாகியுள்ளதால் அங்கு மக்கள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதேபோல திற்பரப்பு நீர்வீழ்ச்சியிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதேசமயம், மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது. அங்கு அதிக அளவில் தண்ணீர் கொட்டி வருவதால் தடை நீடிக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் மலை ரயில் போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது. இல்குரோ ரயில் நிலையப் பகுதியில், தண்டவாளத்தில் மண் சரிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடை நீடிக்கிறது.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}