சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த ஒரு வாரத்துக்கு மிதமான மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த சீசனை யாராலும் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது என்பது போல வட மாவட்டங்களையும், தென் கோடி மாவட்டங்களையும் கன மழையும், பெரு வெள்ளமும் வந்து உலுக்கி எடுத்து விட்டன.
இந்த இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பின்னணியில் இன்று காலை முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.

தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், நாகப்பட்டனம், திருமருகல், தாராசுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, குற்றாலத்தில் ஐந்தருவியில் நீர் விழுவது இயல்பாகியுள்ளதால் அங்கு மக்கள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதேபோல திற்பரப்பு நீர்வீழ்ச்சியிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதேசமயம், மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது. அங்கு அதிக அளவில் தண்ணீர் கொட்டி வருவதால் தடை நீடிக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் மலை ரயில் போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது. இல்குரோ ரயில் நிலையப் பகுதியில், தண்டவாளத்தில் மண் சரிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடை நீடிக்கிறது.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}