சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் வெட்கை தணிந்து தற்போது குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் மழை:
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்:
தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் கேரளா மற்றும் கர்நாடகாவிலும் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. அருப்புக்கோட்டை, திருமயம், கோவிலாங்குளத்தில் தலா 7 சென்டிமீட்டர் மழையும், ஜெயங்கொண்டம் மற்றும் திருச்சுழியில் தலா 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
{{comments.comment}}