சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் ஒன்பதாம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதிக கன மழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது. இதனால் மழை நீர் தேங்கி பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்தது. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. போக்குவரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் மக்கள் உடைமைகளையும் பொருட்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மழை விட்டு இரண்டு நாட்கள் ஆகியும் கூட இன்னும் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதே சமயத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகள், ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகின்றன. இதற்கிடையே நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் டிசம்பர் மாதத்தில் மழை அதிகரிக்கும்.வடகிழக்கு பருவமழை இயல்பை விட 31 சதவிகிதம் அதிகமாக பெய்யக்கூடும் என அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும், அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழையே பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . அதன்படி
இன்று கனமழை:
நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆகிய 11 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மழை:
சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.
மிதமான மழை:
தமிழ்நாட்டில் நாளை முதல் டிசம்பர் ஒன்பதாம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்
4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை
ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
{{comments.comment}}