சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் ஒன்பதாம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதிக கன மழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது. இதனால் மழை நீர் தேங்கி பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்தது. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. போக்குவரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் மக்கள் உடைமைகளையும் பொருட்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மழை விட்டு இரண்டு நாட்கள் ஆகியும் கூட இன்னும் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதே சமயத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகள், ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகின்றன. இதற்கிடையே நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் டிசம்பர் மாதத்தில் மழை அதிகரிக்கும்.வடகிழக்கு பருவமழை இயல்பை விட 31 சதவிகிதம் அதிகமாக பெய்யக்கூடும் என அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும், அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழையே பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . அதன்படி
இன்று கனமழை:
நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆகிய 11 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மழை:
சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.
மிதமான மழை:
தமிழ்நாட்டில் நாளை முதல் டிசம்பர் ஒன்பதாம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}