சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் ஒன்பதாம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதிக கன மழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது. இதனால் மழை நீர் தேங்கி பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்தது. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. போக்குவரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் மக்கள் உடைமைகளையும் பொருட்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மழை விட்டு இரண்டு நாட்கள் ஆகியும் கூட இன்னும் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதே சமயத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகள், ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகின்றன. இதற்கிடையே நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் டிசம்பர் மாதத்தில் மழை அதிகரிக்கும்.வடகிழக்கு பருவமழை இயல்பை விட 31 சதவிகிதம் அதிகமாக பெய்யக்கூடும் என அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும், அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழையே பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . அதன்படி
இன்று கனமழை:
நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆகிய 11 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மழை:
சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.
மிதமான மழை:
தமிழ்நாட்டில் நாளை முதல் டிசம்பர் ஒன்பதாம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Poem on Love: காதல்!
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
Tamil Short Story: புதுமைப்பெண்!
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
{{comments.comment}}