இரவு வரை மழை தொடரும்.. பிறகு செங்கல்பட்டிலும், அடுத்து சென்னையிலும் குறையும்.. பிரதீப் ஜான்

Dec 04, 2023,05:42 PM IST

சென்னை: சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களில் இன்று இரவு வரை தொடர்ந்து மழை பெய்யும்.. விட்டு விட்டும், இடைவிடாமலும் பெய்யும். புயல் நமக்கு அருகே இருக்கும் வரை மழையை நாம் தவிர்க்க முடியாது. இரவில் படிப்படியாக மழை குறைய ஆரம்பிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


சென்னையை உலுக்கி எடுத்து வருகிறது மிச்சாங் புயலால் பெய்து வரும் அதீத கன மழை. சரமாரியாக பெய்து வரும் மழையால் சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. இவ்வளவு மழை பெய்யும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 2015 ம் ஆண்டு பெருமழையை தற்போதைய மழை மிஞ்சி விட்டது.


இந்த மழை எப்படா நிற்கும் என்று எல்லோரும் கவலையுடன் கேட்க ஆரம்பித்து விட்டனர். இப்படியே பெய்து கொண்டிருந்தால் என்னாவது  என்ற கவலை எல்லோருக்கும் வந்து விட்டது. 




இந்தநிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இரவு வரை இந்த மழை தொடரும். இடைவிடாமலும், விட்டு விட்டு விட்டும் பெய்யும்.  புயல் நமக்கு அருகே இருக்கும் வரை நம்மால் மழையைத் தவிர்க்க முடியாது.


2015ம் ஆண்டு வெள்ளத்திற்குப் பிறகு சென்னைக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய மழை இதுதான். சில இடங்களில் மழைப்பொழிவின் அளவை சரியாக எடுக்க முடியவில்லை. இதனால் சரியான மழைப்பொழிவு அளவு நம்மிடம் இல்லை.


இரவில் மழை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். முதலில் செங்கல்பட்டிலும், பிறகு சென்னையிலும் மழை குறையும். அடுத்து நள்ளிரவுக்கு மேல் திருவள்ளூரில் மழை குறையா ஆரம்பிக்கும்.


இதுவரை மீனம்பாக்கத்தில் 415 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது நுங்கம்பாக்கத்தை விட அதிகம். நுங்கம்பாக்கம் வானிலை மையத்தில் 390 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று பிரதீப் ஜான் கூறியுள்ளார்.


நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையில் பிற்பகல் லேசான தொய்வு காணப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் வலுவாக மழை பெய்து வருவதால் நான்கு மாவட்ட மக்களும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

அதிகம் பார்க்கும் செய்திகள்