சென்னை : நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருவதாகவும், இந்த மழை இன்னும் 2 நாட்களுக்கு பிறகே குறையும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று பகல் 02.30 வரை பதிவான மழை அளவு குறித்த விபரங்களை தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

காலை 08.30 மணி முதல் 10.30 மணி வரை பெய்த மழையை விட 12.30 மணி வரை கூடுதலாக மழை பெய்துள்ளது. பகல் 02.30 வரை அதை விட அதிகமாக பதிவாகி உள்ளது. மிக அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 200 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. ராதாபுரத்தில் 191 மி.மீ.,ரும், நாங்குநேரியில் 186 மி.மீ.,ரும், சேரன்மாதேவியில் 147.80 மி.மீ.,ம், களக்காட்டில் 162.40 மி.மீ.,ம், நம்பியார் அணை பகுதியில் 185 மி.மீ.,ம் மழை பதிவாகி உள்ளது.
திருநெல்வேலியில் 105 மி.மீ.,ம், பாபநாசத்தில் 143 மி.மீ.,ம், அம்பாசமுத்திரத்தில் 131 மி.மீ.,ம் மழை பெய்துள்ளது. பாளையங்கோட்டையில் 90 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்த மழை இதோடு நிற்காது என்றும் வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
நாளை காலை இன்னும் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், 300 மி.மீ., க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரேவித்துள்ளார். செவ்வாய்கிழமைக்கு பிறகே மழை குறைய வாய்ப்புள்ளதாகவும். மிக ஆபத்தான மழை பெய்து வருவதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}