சென்னை : நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருவதாகவும், இந்த மழை இன்னும் 2 நாட்களுக்கு பிறகே குறையும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று பகல் 02.30 வரை பதிவான மழை அளவு குறித்த விபரங்களை தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
காலை 08.30 மணி முதல் 10.30 மணி வரை பெய்த மழையை விட 12.30 மணி வரை கூடுதலாக மழை பெய்துள்ளது. பகல் 02.30 வரை அதை விட அதிகமாக பதிவாகி உள்ளது. மிக அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 200 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. ராதாபுரத்தில் 191 மி.மீ.,ரும், நாங்குநேரியில் 186 மி.மீ.,ரும், சேரன்மாதேவியில் 147.80 மி.மீ.,ம், களக்காட்டில் 162.40 மி.மீ.,ம், நம்பியார் அணை பகுதியில் 185 மி.மீ.,ம் மழை பதிவாகி உள்ளது.
திருநெல்வேலியில் 105 மி.மீ.,ம், பாபநாசத்தில் 143 மி.மீ.,ம், அம்பாசமுத்திரத்தில் 131 மி.மீ.,ம் மழை பெய்துள்ளது. பாளையங்கோட்டையில் 90 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்த மழை இதோடு நிற்காது என்றும் வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
நாளை காலை இன்னும் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், 300 மி.மீ., க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரேவித்துள்ளார். செவ்வாய்கிழமைக்கு பிறகே மழை குறைய வாய்ப்புள்ளதாகவும். மிக ஆபத்தான மழை பெய்து வருவதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
{{comments.comment}}