சென்னை : நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருவதாகவும், இந்த மழை இன்னும் 2 நாட்களுக்கு பிறகே குறையும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று பகல் 02.30 வரை பதிவான மழை அளவு குறித்த விபரங்களை தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
காலை 08.30 மணி முதல் 10.30 மணி வரை பெய்த மழையை விட 12.30 மணி வரை கூடுதலாக மழை பெய்துள்ளது. பகல் 02.30 வரை அதை விட அதிகமாக பதிவாகி உள்ளது. மிக அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 200 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. ராதாபுரத்தில் 191 மி.மீ.,ரும், நாங்குநேரியில் 186 மி.மீ.,ரும், சேரன்மாதேவியில் 147.80 மி.மீ.,ம், களக்காட்டில் 162.40 மி.மீ.,ம், நம்பியார் அணை பகுதியில் 185 மி.மீ.,ம் மழை பதிவாகி உள்ளது.
திருநெல்வேலியில் 105 மி.மீ.,ம், பாபநாசத்தில் 143 மி.மீ.,ம், அம்பாசமுத்திரத்தில் 131 மி.மீ.,ம் மழை பெய்துள்ளது. பாளையங்கோட்டையில் 90 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்த மழை இதோடு நிற்காது என்றும் வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
நாளை காலை இன்னும் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், 300 மி.மீ., க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரேவித்துள்ளார். செவ்வாய்கிழமைக்கு பிறகே மழை குறைய வாய்ப்புள்ளதாகவும். மிக ஆபத்தான மழை பெய்து வருவதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}