இலங்கை பொருளாதார சீரழிவுக்கு.. ராஜபக்சே சகோதரர்களே காரணம்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Nov 15, 2023,09:12 AM IST

கொழும்பு: இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்து போனதற்கு முன்னாள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்களின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று இலங்கை சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.


2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு காலகட்டத்தில் பொருளாதாரத்தை சரிவர கையாளாமல், மக்களின் அடிப்படைகளை மீறும் வகையில் அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே நடந்து கொண்டதாகவும் கோர்ட் கூறியுள்ளது.




தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா, நீதிபதிகள் புவனகா அலுவிஹாரே, விஜித் மலகோடா, முருது பெர்னாண்டோ ஆகியோர் ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராகவும், நீதிபதி பிரியந்தா ஜெயவர்த்தனா ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர். இருப்பினும் ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் பெரும்பான்மையான தீர்ப்பு அளித்துள்ளனர்.


கோத்தபயா ராஜபக்சே தவிர முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, மத்திய வங்கி மானிட்டரி போர்டு, முன்னாள் நிதித்துறை செயலாளர் ஜெயசுந்தரா, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் ஆகியோரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


கோத்தபயா ராஜபக்சே அதிபராக இருந்தபோது பெரும் பெரும் தொழிலதிபர்களுக்கு ரூ. 681 கோடி வரிச் சலுகை அளிக்கப்பட்டதைக் கோர்ட் கண்டித்துள்ளது.  அதுதான் இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைய ஆரம்பப் புள்ளி என்று அது கூறியுள்ளது.


சர்வதேச நிதியத்திடமிருந்து விரைவாக கடன் பெறத் தவறியது, இலங்கையின் ரூபாய் மதிப்பு சரியத் தொடங்கியதைத் தடுக்கத் தவறியது ஆகியவையும் கூட கோத்தபயா ராஜபக்சே அரசின் மிகப் பெரிய தவறாக சுப்ரீம் கோர்ட் சுட்டிக் காட்டியுள்ளது.


சமூகத்தின் பல்வேறு அங்கத்தினர் இணைந்து ராஜபக்சே சகோதரர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. மனுதாரர்களுக்கு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலா ரூ. 1.50 லட்சம் நஷ்ட ஈடு தரவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

அதிகம் பார்க்கும் செய்திகள்