இலங்கை பொருளாதார சீரழிவுக்கு.. ராஜபக்சே சகோதரர்களே காரணம்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Nov 15, 2023,09:12 AM IST

கொழும்பு: இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்து போனதற்கு முன்னாள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்களின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று இலங்கை சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.


2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு காலகட்டத்தில் பொருளாதாரத்தை சரிவர கையாளாமல், மக்களின் அடிப்படைகளை மீறும் வகையில் அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே நடந்து கொண்டதாகவும் கோர்ட் கூறியுள்ளது.




தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா, நீதிபதிகள் புவனகா அலுவிஹாரே, விஜித் மலகோடா, முருது பெர்னாண்டோ ஆகியோர் ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராகவும், நீதிபதி பிரியந்தா ஜெயவர்த்தனா ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர். இருப்பினும் ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் பெரும்பான்மையான தீர்ப்பு அளித்துள்ளனர்.


கோத்தபயா ராஜபக்சே தவிர முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, மத்திய வங்கி மானிட்டரி போர்டு, முன்னாள் நிதித்துறை செயலாளர் ஜெயசுந்தரா, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் ஆகியோரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


கோத்தபயா ராஜபக்சே அதிபராக இருந்தபோது பெரும் பெரும் தொழிலதிபர்களுக்கு ரூ. 681 கோடி வரிச் சலுகை அளிக்கப்பட்டதைக் கோர்ட் கண்டித்துள்ளது.  அதுதான் இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைய ஆரம்பப் புள்ளி என்று அது கூறியுள்ளது.


சர்வதேச நிதியத்திடமிருந்து விரைவாக கடன் பெறத் தவறியது, இலங்கையின் ரூபாய் மதிப்பு சரியத் தொடங்கியதைத் தடுக்கத் தவறியது ஆகியவையும் கூட கோத்தபயா ராஜபக்சே அரசின் மிகப் பெரிய தவறாக சுப்ரீம் கோர்ட் சுட்டிக் காட்டியுள்ளது.


சமூகத்தின் பல்வேறு அங்கத்தினர் இணைந்து ராஜபக்சே சகோதரர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. மனுதாரர்களுக்கு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலா ரூ. 1.50 லட்சம் நஷ்ட ஈடு தரவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்