கூட்டணியின் கட்டளைத் தளபதி எடப்பாடி பழனிச்சாமி தான்.. அவர் எடுப்பதே இறுதி முடிவு: ராஜேந்திர பாலாஜி!

Jun 27, 2025,03:11 PM IST
சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்டளைத் தளபதி எடப்பாடி பழனிச்சாமி தான். அவர் எடுப்பதே இறுதி முடிவு என முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

2026ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் இந்த கூட்டணி குறித்து பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன. அதிமுக-பாஜக கூட்டணி ரெய்டுக்கு பயந்து அமைந்த கூட்டணி என்றும், இந்த கூட்டணியில் அதிமுகவினர்களுக்கே உடன்பாடு கிடையாது என்றும் சொல்லப்பட்டு வருகிறது.



இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும். எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். அதில் பாஜக முக்கிய பங்கு வகிக்கும். தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். அக்கட்சியில் இருந்து முதலமைச்சர் வருவார்.  அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் யாரையும் நான் ஒன்றிணைக்கவில்லை. அதிமுக-பாஜக கூட்டணி மிக வலுவான நிலையில் இருக்கிறது என்று முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி பெயரைக் குறிப்பிடாமல் பேசியிருந்தார் அமித்ஷா.

2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்று தான் கூறினேன். கூட்டணி அரசு என கூறவில்லை என்று திட்டவட்டமாக முன்னரே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், அமித்ஷா எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பது எனக்கு தெரியாது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி தான். கூட்டணியின் கட்டளைத் தளபதி எடப்பாடி பழனிச்சாமி தான். கட்சியில் அவர் எடுப்பதே இறுதி முடிவு. அவர் சொல்லுவது தான் எங்களுக்கு கட்டளை. கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை சீட்டுகள் என்பதனை எங்கள் தலைவர் எடப்பாடி தான் முடிவு எடுப்பார். தவெக- அதிமுக இணைய வாய்ப்புள்ளது. திமுகவை எதிர்க்கும் அத்தனை கட்சியையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற பணியை எடப்பாடியார் செய்து வருகிறார். எங்கள் தலைவர் எடுக்கும் முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!

news

Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!

news

மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)

news

நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)

news

Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்