டெல்லி: இந்திய ஆயுதப் படையினரின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலை கண்டித்து, இந்தியா பாடம் புகட்டும் விதமாக தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அதன்படி இந்திய ராணுவம் மே 7 அதிகாலையில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்களை குறி வைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை தொடங்கியது.
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.44 மணி அளவில் ஜெய்ஷ்-இ- முகமது மற்றும் லஷ்கர்-ஈத்- தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் மீது இந்திய ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படை சுமார் 23 நிமிடங்கள் இந்த தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பயங்கரவாதிகள் மீதான தாக்குதலுக்கு 24 ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் குண்டுகளை இந்தியா பயன்படுத்தி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் ஏப்ரல் 22 அன்று Pahalgam-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இருந்தது. அந்த தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் கோபத்தையும், துக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்திய ராணுவம் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில், பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது.பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.இந்தியா, இந்திய மக்கள் மீதான எந்த ஒரு தாக்குதலுக்கு மோடி அரசு தக்க பதிலடி கொடுக்கும். ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்திய இந்திய ஆயுதப் படைகளை நினைத்து பெருமைப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், போராளிகளின் தாக்குதல் தொடங்கியது. நோக்கம் நிறைவேறும் வரை தாக்குதல் நிற்காது. மொத்த தேசமும் உங்களுடன் (மோடி, அமித்ஷா) நிற்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் போஜ்பூர் காஷ்மீர் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன்சிந்தூர் என்ற திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய ஆயுதப்படைகளுக்கு பாராட்டுகள் தெரிவித்து கொள்கிறேன். மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் விழிப்புடன் கூடிய தலைமையின் கீழ் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்க்கமான நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், நமது குடிமக்களைப் பாதுகாப்பதற்கும், நமது நாட்டின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை அழித்தது. அங்கிருந்துதான் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு இயக்கப்படுகின்றன." மேலும், இந்தியாவின் இந்த நடவடிக்கை எந்தவிதமான தீவிரவாதத்தையும் தூண்டாத வகையில் கவனமாக திட்டமிடப்பட்டது. எங்கள் நடவடிக்கை கவனம் செலுத்தியதாகவும், அளவானதாகவும், தீவிரமடையாத வகையிலும் இருந்தது. பாகிஸ்தானின் எந்த இராணுவ தளங்களும் குறிவைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்...எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
சவுதி அரேபியாவில் கோர விபத்து...42 இந்தியர்கள் பலியான துயரம்
பீகாரில் புதிய ஆட்சியமைக்கும் பணிகள் விறுவிறுப்பு.. வெற்றி விழாவுக்கு பிரதமர் மோடி வருகிறார்
என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.. தேஜஸ்வி யாதவ் மீது லாலு பிரசாத் மகள் புகார்
மோமோ விற்பனையில் தினசரி 1 லட்சம் சம்பாதிக்கிறார்களா பெங்களூரு இளைஞர்கள்??
மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்!
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கியது!
மின்னல்வெட்டு தாங்க முடியாமல்.. இடி முழக்க சத்தம் இட்டு பிரசவித்த குழந்தை.. மழையே..!
{{comments.comment}}