சென்னை: டிவிட்டரில் பிரபலமான அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வம் போட்டுள்ள டிவீட் வைரலாகியுள்ளது. ரஜினி ரசிகர்கள் வந்து கமெண்ட் போட்டுக் கொண்டுள்ளனர்.
அப்படி என்ன பண்ணிட்டார் ஆசிரியர் செல்வம்.. ஜெயிலர் பத்தி போட்ட டிவீட்தான் அது.. அதுதான் காரணம்!
வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் செல்வ சிதம்பரம். டிவிட்டரில் அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வம் என்ற பெயரில் பிரபலமானவர். சிறந்த ஆசிரியராக செயல்பட்டு வருபவர். மாணவர்களுக்கு இவர் ஆற்றி வரும் பல்வேறு சேவைகள் பிரசித்தமானவை, பலராலும் பாராட்டப்பட்டவை.
சமூகம் சார்ந்த கருத்துக்களையும் அவ்வப்போது போடுவார் செல்வம். கூடவே சினிமா பக்கமும் அவ்வப்போது விசிட் அடிப்பார். அந்த வகையில் ஜெயிலர் படம் குறித்து ஒரு டிவீட் போட்டுள்ளார் செல்வம். அதுதான் தற்போது சலசலப்பாகியுள்ளது.
அந்த டிவீட்டில் செல்வம் சொல்லியிருப்பது இதுதான்:
உண்மையில் ஒருகாலத்தில் நான் தீவிர சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகன் என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். பாட்ஷா இன்று தொலைக்காட்சியில் ஓடினாலும் முழுமையாக பார்த்துவிட்டு கிளம்புவேன். இன்றுதான் ஜெயிலர் பிரைமில் பார்த்தேன். மரண மொக்கை படமாக தெரிவது எனக்கு மட்டும்தானா? . நமக்குதான் ரசனை இல்லாமல் போய்விட்டதா என தெரியவில்லை.
தமிழ் சினிமாவில் கதை , இயக்குநர் வறட்சி ஏற்பட்டு விட்டதா?. ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தால் அது பெரிய பேசு பொருளாகும். (திரும்ப திரும்ப பேசுற நீ மோமெண்ட்). அப்படி மிகப்பெரிய விளம்பர தளத்தை வைத்து வென்றிருக்கிறார்கள். வேறொன்றும் சொல்வதற்கில்லை. என்னை திட்டுவோர் திட்டிக்கொள்ளலாம்.
இடிப்பாரில்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்.
இந்த டிவீட்டுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் சரமாரியாக கமெண்ட் போட்டு வருகின்றனர். நீங்க ரஜினி ரசிகராக இருந்தால் முதலில் தியேட்டரில் போய் படத்தைப் பார்த்திருக்க வேண்டும். அதையும் பார்க்காமல் இப்படி கமெண்ட் போடுவது தவறு என்று பலர் கூறியுள்ளனர். இன்னும் சிலரோ, படம் மொக்கையாக தெரிவதற்குக் காரணம் உங்களுக்கு வயசாய்ருச்சு. அனிருத் காலத்துக்கு மாற உங்களால முடியலை என்று கிண்டலடித்துள்ளனர்.
செல்வம் சார்.. நமக்கெதுக்கு சார் சினிமா எல்லாம்.. உங்களோட சேவை இன்னும் இன்னும் பல பிள்ளைகளுக்கு தேவை.. அதைப் பார்க்கலாம் வாங்க சார்.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}