சென்னை: இந்தியா நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி நேற்று மும்பையில் நடந்தது. இப்போட்டியில் இந்தியா சிறப்பாக ஆடி 397 ரன்களைக் குவித்து அசத்தியது. விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐய்யர் ஆகியோர் சதம் அடித்தனர். சுப்மன் கில் 80 ரன்களைக் குவித்தார்.
பின்னர் பந்து வீச்சில் லேசாக சொதப்பினாலும் கூட, முகம்மது ஷமியின் அபாரமான பந்து வீச்சால், சிறப்பாக செயல்பட்டு பிரமாதமான வெற்றியைப் பெற்று இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து விட்டது.
நேற்றைய போட்டியை இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபலங்கள் திரண்டு வந்து பார்த்து மகிழ்ந்தனர். அதில் நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் ஒருவர். தனது மனைவி லதா ரஜினிகாந்த், மைத்துனர் ரவி ராகவேந்தர் ஆகியோர் புடை சூழ போட்டியை கண்டு களித்தார் ரஜினிகாந்த்.
தனது மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள் இந்தியாவின் வெற்றி குறித்து கேட்டபோது, முதல்ல கொஞ்சம் டென்ஷனா இருந்துச்சு. ஆனால் 2, 3 விக்கெட் விழுந்த பிறகு, பதட்டம் போயிருச்சு. ஒன்றரை மணி நேரம் டென்ஷன்தான். ஆனால் 100% கப் நம்தே.. நமக்குத்தான்.. நேற்றைய போட்டியின் வெற்றிக்கு முகம்மது ஷமிதான் காரணம் என்றார் ரஜினிகாந்த்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}