"ஒன்றரை மணி நேரம் டென்ஷன் பண்ணிட்டாங்க.. but.. 100% கப் நம்தே".. தலைவரே சொலிட்டாருப்பா!

Nov 16, 2023,08:47 PM IST

சென்னை: இந்தியா நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி நேற்று மும்பையில் நடந்தது. இப்போட்டியில் இந்தியா சிறப்பாக ஆடி 397 ரன்களைக் குவித்து அசத்தியது. விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐய்யர் ஆகியோர் சதம் அடித்தனர். சுப்மன் கில் 80 ரன்களைக் குவித்தார்.


பின்னர் பந்து வீச்சில் லேசாக சொதப்பினாலும் கூட, முகம்மது ஷமியின் அபாரமான பந்து வீச்சால், சிறப்பாக செயல்பட்டு பிரமாதமான வெற்றியைப் பெற்று இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து விட்டது.




நேற்றைய போட்டியை இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபலங்கள் திரண்டு வந்து பார்த்து மகிழ்ந்தனர். அதில் நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் ஒருவர். தனது மனைவி லதா ரஜினிகாந்த், மைத்துனர் ரவி ராகவேந்தர் ஆகியோர் புடை சூழ போட்டியை கண்டு களித்தார் ரஜினிகாந்த்.


தனது மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள் இந்தியாவின் வெற்றி குறித்து கேட்டபோது, முதல்ல கொஞ்சம் டென்ஷனா இருந்துச்சு. ஆனால் 2, 3 விக்கெட் விழுந்த பிறகு, பதட்டம் போயிருச்சு. ஒன்றரை மணி நேரம் டென்ஷன்தான். ஆனால் 100% கப் நம்தே.. நமக்குத்தான்.. நேற்றைய போட்டியின் வெற்றிக்கு முகம்மது ஷமிதான் காரணம் என்றார் ரஜினிகாந்த்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்