சென்னை: ரஜினிகாந்த் ஒரு ஸ்டைல் மன்னன் என்று உலகுக்கே தெரியும்.. அவர் செய்யும் ஒவ்வொரு ஸ்டைலும் முத்திரை பதிக்கும்.. அந்த வகையில் வேட்டையன் படத்தில் அவர் காட்டிய ஒரு ஸ்டைல் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது.. பளிச்சென பலரது மனதையும் உடனே கவர்ந்து விட்டது.
அது.. கூலர் கண்ணாடியை தூக்கிப் போட்டதும் அது போய் அவரரது கண்களில் இருந்த பிரேமில் உட்கார்ந்ததுதான். இந்த ஸ்டைல் இதுவரை அவர் செய்திராதது, சினிமாக்களில் யாரும் செய்து பார்த்திராதது.. ஆனால் இது புதிய மேட்டர் கிடையாது.. ஏற்கனவே இருக்கும் ஒரு புதிய டெக்னாலஜிதான்.. ஆனால் ரஜினிகாந்த் செய்ததால் அது ஸ்டைல் மேட்டராகி விட்டது.
ரஜினி தூக்கிப் போட்டு கண்ணில் உட்கார்ந்தது ஒரு Magentic Eye Glass ஆகும். இது ஏற்கனவே பாப்புலராக உள்ள விஷயம்தான். இந்த வகை கண்ணாடிகளில் பிரேமும், கிளாஸும் தனித் தனியாகவே இருக்கும். தேவை என்றால் கிளாஸை தனியாக எடுத்து விட முடியும். தேவைப்படும் நேரத்தில் பிரேமில் பொருத்திக் கொள்ள முடியும்.

இந்த வகை கண்ணாடிகளின் பிரேமில் இரண்டு பகுதிகள் இருக்கும். அதாவது டாப் பிரேம் மற்றும் பேஸ் பிரேம். இதில் டாப் பிரேமுக்கும், பேஸ் பிரேமுக்கும் இடையே ஈர்ப்பு கிடைக்கும் வகையில் சிறு சிறு காந்தங்கள் பொருத்தப்பட்டிருக்கும். மிகவும் நுன்னிய காந்தங்கள் இவை. இந்த காந்தங்களின் ஈர்ப்பு காரணமாகத்தான் கிளாஸை இதில் பொருத்தும்போது அது கச்சிதமாக பொருந்திக் கொள்ளும்.
இந்த பிரேம் மிக மிக லேசான எடை கொண்டது என்பது இதன் விசேஷமாகும். கண்ணாடியை பிரேமுக்கு அருகில் கொண்டு வந்தாலே அது போய் கச்சிதமாக பிரேமுக்குள் உட்கார்ந்து கொள்ளும். அதற்கேற்ற வகையில் அந்தக் கண்ணாடியும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்த வகை கண்ணாடியைத்தான் சூப்பர் ஸ்டார் தனது வேட்டையன் படத்தில் பயன்படுத்தியுள்ளார். ஆனால் சொல்வதற்கு இது ஈசிதான்.. ஆனால் ரஜினி தூக்கிப் போட்டது போல போட்டு கண்ணாடியை பிரேமுக்குள் உட்கார வைப்பதுதான் கஷ்டம்.. ஆனால் அது ரஜினிக்கு கண்டிப்பாக கஷ்டம் இல்லை.. அவர்தான் ரஜினி "காந்தம்" ஆச்சே!
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}