அயோத்தி : ராமஜென்ம பூமியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோவிலை நேரில் சென்ற பார்த்த பிறகு கூறிய கருத்துக்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். ஒரு படம் முடித்த பிறகு இமயமலை சென்று பாபாஜியின் குகையில் தியானம் செய்து, அங்கு ஓய்வெடுத்து விட்டு வருவது ரஜினியின் வழக்கம். பல ஆண்டுகளாக ரஜினி இதை கடைபிடித்து வருகிறார். ஆனால் கொரோனா, அதன் பிறகு ரஜினிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு போன்ற காரணங்களால் ரஜினி இமயமலை செல்லாமல் இருந்து வந்தார். அதற்கு பதில் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் தனிமையில் தியானத்தில் ஈடுபட்டு, ஓய்வு எடுத்து வந்தார்.

தற்போது உடல்நிலை தேறி, ஜெயிலர் படமும் செம ஹிட் ஆகிய விட்டதால், படம் ரிலீசான கையோடு நீண்ட இடைவெளிக்கு மீண்டும் இமயமலை சென்று விட்டார் ரஜினி. இமயமலையில் அவர் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் சமீப நாட்களாக இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் இமயமலை பயணத்தை முடித்த ரஜினி, நேராக சென்னை திரும்பாமல் வட மாநிலங்களில் உள்ள பல முக்கிய இடங்களுக்கும் சென்று வருகிறார்.
நேற்று உத்திர பிரதேசம் சென்ற ரஜினி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஜெயிலர் படம் பார்க்க அழைப்பு விடுத்தார். ஆனால் யோகி ஆதித்யநாத், ஜெயிலர் படம் பார்க்கவில்லை என சொல்லப்பட்டது. ரஜினி எதற்காக திடீரென உத்திர பிரதேசம் சென்றுள்ளார் என்ற காரணமும் தெரியவில்லை.

இந்நிலையில் இன்று உத்திர பிரதேசத்தில் ராம ஜென்ம பூமியில் புதிதாக, பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை ரஜினி நேரில் சென்று பார்த்தார். ராமர் கோவில், அந்த கோவிலுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டு வரும் வழித்தடம் ஆகியவற்றை பார்த்த ரஜினியிடம், கோவில் எப்படி இருக்கிறது ? அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, இது சரித்திரம். கோவில் திறக்கப்பட்ட பிறகு எப்படி கட்டி இருக்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள். உங்களுக்கே அது தெரியும் என பதிலளித்தார்.
பல கோடி செலவில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் 2024 ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உத்திர பிரதேச அரசும், ராமஜென்ம பூமி கோவில் டிரெஸ்ட் கமிட்டியினரும் மிகத் தீவிரமாக செய்து வருகிறது. ரஜினிகாந்த் அயோத்தி சென்று வந்த போட்டோக்களும் தற்போது சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}