சென்னை: லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் மீண்டும் இணையவுள்ளனர். ஆனால் இது கூலி 2.0 கிடையாது. இது முற்றிலும் புதிய கதை. புதிய கதாபாத்திரங்கள் மற்றும் தனித்துவமான கதை அம்சத்துடன் இருக்கும். தற்போதுள்ள கூட்டணியிலிருந்து இது மாறுபட்டதாக இருக்குமாம்.
கூலி படத்தை தற்போது ரஜினிகாந்த்தை வைத்து இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இது அவரது எல்சியூவில் வராதாம். ரஜினிக்காவே பிரத்யேகமாக எழுதப்பட்ட கதையாம் கூலி. ஆகஸ்ட் 14ம் தேதி படம் திரைக்கு வருகிறது. ஏற்கனவே சில பாடல்கள் வெளியாகி வைரலாகியுள்ளன. ஆடியோ வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் ரஜினியுடன் இணையப் போகிறாராம் லோகேஷ் கனகராஜ். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரஜினி சாருடன் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். நாங்கள் மீண்டும் இணைந்து பணியாற்றினால், அது வித்தியாசமாக இருக்கும். ஒரு புது யுனிவர்ஸை உருவாக்குவோம். இந்த படத்தில் நடக்கும் விஷயங்கள் அதற்கேற்ப எழுதப்பட்டுள்ளன. இது ஒரு தனித்துவமான படம். இதன் கதை இத்துடன் முடிவடைகிறது. அவருடன் எதையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். அவர் என்னை அழைத்தால், நான் நிச்சயமாக செய்வேன். அவருடன் பணியாற்ற எனக்கு ஆசை இருக்கிறது.

கூலி படத்தை பார்த்த பிறகு, இன்னொரு படம் பண்ணலாம்னு பேசினோம். ஆனால் காலக்கெடு பற்றி உறுதியாக தெரியவில்லை. நாங்கள் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம் என்றார் லோகேஷ்.
கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், சத்யராஜ், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்.ஜி.ஆர், மோனிஷா பிளஸ்ஸி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழகத்தில் மார்ச் 18 மற்றும் 19ம் தேதிகளில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதி...பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
தமிழ்நாடு - புதுச்சேரியில் வெவ்வேறு தேதிகளில் தேர்தல்; புதுவையில் வேட்புமனு தாக்கல் துவக்கம்
முதல் நாளிலேயே ரூ.1.26 கோடி பறிமுதல்...தலைமைத் தேர்தல் அதிகாரி சொன்ன பகீர் தகவல்
தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் அனலை கிளப்ப போகும் டாப் 10 பிரச்சனைகள்
அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
விடியா ஆட்சியில் விலகாத இருள்: பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை பாதுகாப்பற்ற சூழல்: தவெக
ரஜினிகாந்திடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
ஜனநாயகன் விவகாரம் முடிவுக்கு வருகிறதா? நாளை தணிக்கை குழு மறுஆய்வு
{{comments.comment}}