ஜெய்ப்பூர்: தனது அரசியல் வாழ்க்கையிலேயே முதல் முறையாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி.
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவர் ராஜ்யசபாவுக்குப் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை இன்று அவர் தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் தலைவராக கடந்த 1998ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை இருந்தவர் சோனியா காந்தி. சுதந்திரத்திற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீண்ட காலம் இருந்த பெருமைக்குரியவர் சோனியா காந்தி.
1999ம் ஆண்டு முதல் முறையாக அவர் கர்நாடக மாநிலம் பெல்லாரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட சுஷ்மா சுவராஜை தோற்கடித்து எம்.பி. ஆனார். அதன் பின்னர் தனது மாமியார் இந்திரா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் தொடர்ந்து போட்டியிட்டு வந்தார். 5 முறை லோக்சபா எம்.பியாக இருந்துள்ளார் சோனியா காந்தி.
தற்போது 77 வயதாகும் சோனியா காந்தி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. காரணம் அவரது உடல் நலம் உள்ள நிலையில் அவரால் தீவிரப் பிரச்சாரம் செய்ய முடியாது என்பதால் அவரது குடும்பத்தினரும் ராஜ்யசபா தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து சோனியா காந்தி ராஜஸ்தானிலிருந்து ராஜ்யசபாவுக்குப் போட்டியிட முடிவு செய்தார். இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கலின்போது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் இருந்தனர். நேரு - இந்திரா குடும்பத்தில் ராஜ்யசபாவுக்குப் போன முதல் தலைவர் இந்திரா காந்திதான். அவர் கடந்த 1964ம் ஆண்டு முதல் 67 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்துள்ளார். அதன் பின்னர் தற்போது 2வது உறுப்பினராக சோனியா காந்தி ராஜ்யசபா உறுப்பினராகவுள்ளார்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி வழக்கம் போல கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடலாம் என்று தெரிகிறது. அவர் வழக்கமாக போட்டியிடும் அமேதியில் கடந்த முறை தோல்வியைத் தழுவினார். இந்த முறை அங்கு யார் போட்டியிடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதேசமயம், சோனியா காந்தி போட்டியிட்டு வரும் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடக் கூடும்.
பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
{{comments.comment}}