ஜெய்ப்பூர்: தனது அரசியல் வாழ்க்கையிலேயே முதல் முறையாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி.
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவர் ராஜ்யசபாவுக்குப் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை இன்று அவர் தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் தலைவராக கடந்த 1998ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை இருந்தவர் சோனியா காந்தி. சுதந்திரத்திற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீண்ட காலம் இருந்த பெருமைக்குரியவர் சோனியா காந்தி.
1999ம் ஆண்டு முதல் முறையாக அவர் கர்நாடக மாநிலம் பெல்லாரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட சுஷ்மா சுவராஜை தோற்கடித்து எம்.பி. ஆனார். அதன் பின்னர் தனது மாமியார் இந்திரா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் தொடர்ந்து போட்டியிட்டு வந்தார். 5 முறை லோக்சபா எம்.பியாக இருந்துள்ளார் சோனியா காந்தி.
தற்போது 77 வயதாகும் சோனியா காந்தி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. காரணம் அவரது உடல் நலம் உள்ள நிலையில் அவரால் தீவிரப் பிரச்சாரம் செய்ய முடியாது என்பதால் அவரது குடும்பத்தினரும் ராஜ்யசபா தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து சோனியா காந்தி ராஜஸ்தானிலிருந்து ராஜ்யசபாவுக்குப் போட்டியிட முடிவு செய்தார். இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கலின்போது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் இருந்தனர். நேரு - இந்திரா குடும்பத்தில் ராஜ்யசபாவுக்குப் போன முதல் தலைவர் இந்திரா காந்திதான். அவர் கடந்த 1964ம் ஆண்டு முதல் 67 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்துள்ளார். அதன் பின்னர் தற்போது 2வது உறுப்பினராக சோனியா காந்தி ராஜ்யசபா உறுப்பினராகவுள்ளார்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி வழக்கம் போல கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடலாம் என்று தெரிகிறது. அவர் வழக்கமாக போட்டியிடும் அமேதியில் கடந்த முறை தோல்வியைத் தழுவினார். இந்த முறை அங்கு யார் போட்டியிடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதேசமயம், சோனியா காந்தி போட்டியிட்டு வரும் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடக் கூடும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}