அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாக.. ராஜ்யசபா தேர்தலில் சோனியா காந்தி போட்டி

Feb 14, 2024,06:06 PM IST

ஜெய்ப்பூர்: தனது அரசியல் வாழ்க்கையிலேயே முதல் முறையாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி.


ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவர் ராஜ்யசபாவுக்குப் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை இன்று அவர் தாக்கல் செய்தார்.




காங்கிரஸ் தலைவராக கடந்த 1998ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை இருந்தவர் சோனியா காந்தி. சுதந்திரத்திற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீண்ட காலம் இருந்த பெருமைக்குரியவர் சோனியா காந்தி.


1999ம் ஆண்டு முதல் முறையாக அவர் கர்நாடக மாநிலம் பெல்லாரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட சுஷ்மா சுவராஜை தோற்கடித்து எம்.பி. ஆனார். அதன் பின்னர் தனது மாமியார் இந்திரா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் தொடர்ந்து போட்டியிட்டு வந்தார். 5 முறை லோக்சபா எம்.பியாக இருந்துள்ளார் சோனியா காந்தி.


தற்போது 77 வயதாகும் சோனியா காந்தி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. காரணம் அவரது உடல் நலம் உள்ள நிலையில் அவரால் தீவிரப் பிரச்சாரம் செய்ய முடியாது என்பதால் அவரது குடும்பத்தினரும் ராஜ்யசபா தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து சோனியா காந்தி ராஜஸ்தானிலிருந்து ராஜ்யசபாவுக்குப் போட்டியிட முடிவு  செய்தார். இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.


வேட்பு மனு தாக்கலின்போது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் இருந்தனர்.  நேரு - இந்திரா குடும்பத்தில் ராஜ்யசபாவுக்குப் போன முதல் தலைவர் இந்திரா காந்திதான். அவர் கடந்த 1964ம் ஆண்டு முதல் 67 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்துள்ளார். அதன் பின்னர் தற்போது 2வது உறுப்பினராக சோனியா காந்தி ராஜ்யசபா உறுப்பினராகவுள்ளார்.


வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி வழக்கம் போல கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடலாம் என்று தெரிகிறது. அவர் வழக்கமாக போட்டியிடும் அமேதியில் கடந்த முறை தோல்வியைத் தழுவினார். இந்த முறை அங்கு யார் போட்டியிடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதேசமயம், சோனியா காந்தி போட்டியிட்டு வரும் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடக் கூடும்.

சமீபத்திய செய்திகள்

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்